மிஸ்டர் மோடி! 56 இஞ்ச் மார்பை விரித்து என்னை கைது செய்யுங்கள்- ராகுல் நேரடி சவால்!!
டெல்லி: இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வைத்திருப்பதாக தம் மீது கூறப்படும் புகார் குறித்து தமது 56 இஞ்ச் மார்பை உயர்த்தி விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்... சிறைக்குப் போகவும் தயார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சவால்விட்டுள்ளார்.
ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருப்பதாக பா.ஜ.க.வின் சுப்பிரமணியன் சுவாமி அண்மையில் குற்றம்சாட்டி இருந்தார். இதனால் ராகுலின் இந்திய குடியுரிமையையும் அவரது எம்.பி. பதவியையும் பறிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்திருந்தது.

இந்நிலையில் டெல்லியில் இந்திரா காந்தியின் 98வது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு ராகுல் காந்தி பேசியதாவது:
எங்கள் குடும்பத்தின் மீது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இதை நான் சிறு வயது முதலே பார்த்து வருகிறேன். இதற்கெல்லாம் நான் அஞ்சப் போவதில்லை.
பிரதமர் மோடி அவர்களே! உங்களிடம்தான் அத்தனை விசாரணை அமைப்புகளும் இருக்கிறதே... என் மீது பல புகார்கள் கூறப்படுகின்றனவே... உங்கள் 56 இஞ்ச் மார்பை உயர்த்தி எனக்கு எதிரான விசாரணைக்கு உத்தரவிடுங்கள்..
6 மாத காலத்தில் என் மீது தவறு நிரூபிக்கப்பட்டால் சிறையில் தூக்கிப் போடுங்கள்.... அதைவிட்டுவிட்டு அவதூறு சேற்றை என் குடும்பத்தின் மீது வாரி இறைக்காதீர்...
இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
போலீசே இழுத்துட்டு போகும்- சுவாமி
ராகுலின் இந்த பேச்சுக்கு சுப்பிரமணியன் சுவாமி பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ராகுல் மீது தவறு நிரூபிக்கப்பட்டால் அவர் என்ன சிறைக்குப் போவது? அவரது அனுமதியில்லாமலேயே போலீசார் சிறைக்கு இழுத்துப் போய்விடுவார்கள்.. தன் மீது உரிய விசாரணை நடத்த ராகுல் விரும்பினால் இங்கிலாந்து அரசிடம் அவர் தாக்கல் செய்த ஆவணங்களை முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications