என் மீது தவறு இருந்தால் சிறையில் தள்ளுங்கள்: ஏழைகளுக்காக தொடர்ந்து போராடுவேன் - ராகுல் பேச்சு
டெல்லி: ஆட்சியும், அதிகாரமும் உங்கள் கையில் இருக்கிறது. எனக்கு எதிரான குற்றச்சாட்டு இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள் இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். நலிந்தோருக்காக தொடர்ந்து போராடுவேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற மாநாட்டில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் எனது பாட்டி ( இந்திரா காந்தி), எனது தந்தை, மற்றும் தாயார் மீது சேற்றை அள்ளி வீசுவதை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன்.

மோடி இப்போது இந்தியாவின் பிரதமர். எனக்கு எதிராக வேறு வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகளில் ஒரு இம்மியளவு கூட உண்மையில்லை. ஆட்சியும், அதிகாரமும் உங்கள் கையில் இருக்கிறது. என் மீதான குற்றசாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, அதில் உண்மையில் இருந்தால் என்னை சிறையில் தள்ளுங்கள் என்று சவால் விடுத்தார் ராகுல். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மூலம் என் மீதும் எனது குடும்பத்தினர் மீது சேற்றை வீசுவதை நிறுத்துங்கள். நீங்கள் தற்போது எதிர்கட்சியாக இல்லை. தற்போது நீங்கள் அரசாங்கத்தில் உள்ளீர்கள் என்றார்.
மேலும், இந்திரா காந்தி மக்களை ஒருங்கிணைக்க பாடுபட்டார். ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்போ மக்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என்றும் ராகுல் குற்றம் சாட்டினார். தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த ராகுல் காந்தி, தனக்கு சிறிய பயம் கூட இல்லை என்றும், ஏழைகள் மற்றும் விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடுவேன் எனவும் தெரிவித்தார்.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி!












Click it and Unblock the Notifications