பண்டிகை காலத்தில் அடித்தது ஜாக்பாட்.. ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்தது ரயில்வே!
டெல்லி: பண்டிகை காலத்தையொட்டி தனது பணியாளர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது இந்திய ரயில்வே.
ரயில்வே துறையின் அறிவிப்பால் 12.3 லட்சம் ஊழியர்கள் பயனடைவார்கள். போனஸ் தொகை ரூ .18,000 முதல் ரூ.19000 வரையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சகம், வெளியிட்டுள்ள டிவிட் ஒன்றில் "12.3 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகிறது. தசரா & பூஜை விடுமுறை நாட்களுக்கு முன்பு ஊழியர்களின் குடும்பங்களுக்கு புன்னகையை பரிசளிக்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.
இது தவிர, ரயில்வேயின் அடிமட்ட ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழா கால கூட்ட நெரிசலை சமாளிக்க, சுமார் 4,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக 9,500 கோச்கள் சேர்க்கப்பட உள்ளன. ம் சில பிஸியான ரயில் நிலையங்களில் இந்த காலக்கட்டத்தில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனை செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில்களில் பயணிக்க விரும்புவோர் 30 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications