ராஜஸ்தானில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, இலவச லேப்டாப், மாட்டு சாணம் கொள்முதல்- காங். அதிரடி வாக்குறுதி!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
200 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வரும் 25-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கக் கூடும் என சில கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவும் எனவும் தேர்தல் கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பாஜக வேட்பாளர்களைஆதரித்து பிரதமர் மோடி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் பிரசாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் இன்று ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
- அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆண்டுக்கு ரூ10,000 வழங்கப்படும்.
- சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ500 என்ற விலைக்கு வழங்கப்படும்
- கால்நடைகளின் சாணம் 1 கிலோ ரூ2-க்கு கொள்முதல் செய்யப்படும்
- அரசு கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கப்படும்.
- இயற்கை பேரிடர் இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு ரூ15 லட்சம் இலவச காப்பீடு திட்டம் வழங்கப்படும்.
- விவசாயிகளுக்கு ரூ2 லட்சம் வரை வட்டியில்லா கடன்கள் வாங்குவோம்.
- அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்படும்.
- அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் ராஜஸ்தான் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
இத்தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
-
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!











Click it and Unblock the Notifications