ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை- முதல் முறையாக பூரி சங்கராச்சாரியார் புறக்கணிப்பு!
புவனேஸ்வர்: ஒடிஷா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நேற்று தொடங்கியது. ஆனால் இந்த ரத யாத்திரை நிகழ்ச்சியை பூரி சங்கராச்சாரியார் புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷா மாநிலம் பூரி நகரில் உள்ள ஜெகநாதர் கோவில் உலக பிரசித்தி பெற்றது. கி.பி. 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக் கோவிலில் நடைபெறும் 9 நாள் ரதயாத்திரையை காண உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.

ரத யாத்திரை தொடக்கம்
ரத யாத்திரை தொடங்கியதையொட்டி நேற்று காலை ஜெகநாதருக்கு முறைப்படி பூஜைகள் நடத்திய பின்னர் கோவில் ஊழியர்கள் ஜெகநாதரை தங்களது தோள்களில் சுமந்து சென்று கோவிலுக்கு வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட தேரில் வைத்தனர்.

ஊர்வலம்
இதன் பின்னர் 16, 14, 12 ஆகிய சக்கரங்கள் கொண்ட பிரமாண்ட தேர்களில் முறையே பூரி ஜெகநாதர், பாலபத்ர சுவாமி, சுபத்திரா தேவியும் பலத்த பாதுகாப்புடன் தேரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வர் நவீன் பட்நாயக்
இந்த ரதயாத்திரை நிகழ்வுக்கு பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

சங்கராச்சாரியார் புறக்கணிப்பு
ஆனால் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை பூரி சங்கராச்சாரியார் ஸ்வாமி நிஸ்சலனந்தா சரஸ்வதி புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஏற்கெனவே ஜெகநாதர் கோவில் நிர்வாகம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

ஏன் புறக்கணிப்பு?
அத்துடன் ஜெகநாதர் கோவில் ஊழியர்கள் 'ஆகம' விதிகளைக் கடைபிடிக்காமல் ரத யாத்திரயை நடத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனாலேயே அவர் நேற்றைய ரத யாத்திரை தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு
ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையை முதல் முறையாக பூரி சங்கராச்சாரியார் புறக்கணித்துள்ளார். அவரை ஒடிஷா மாநில அரசு சமாதானபடுத்தாதது ஏன் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளன.

மத்திய அமைச்சர்கள் சந்திப்பு
இதனிடையே இந்த பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணும் வகையில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், ஜூயல் ஓரம் ஆகியோர் பூரி சங்கராச்சாரியாரை நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications