ஆந்திராவில் ஜெய்பீம் குறித்து பேசிய நீதிபதி சந்துரு.. ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதும் புகார்!
விஜயவாடா: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது ஒதுக்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கதாநாயகன் அவர்களுக்கு நீதி பெற்று தருவதே படத்தின் கதை.
உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் நிஜ நாயகன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு ஆவார். 1993-ல் அவர் வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில்தான் படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.

நிஜ நாயகன் நீதிபதி சந்துரு
1993--ம் ஆண்டில் கடலூர் அருகே உள்ள முதனை கிராமத்தில் நிகழ்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கு தான் படத்தின் கதை, நீதிபதி சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது இந்த கொலையை ஏற்று நடத்தினார். தனக்கு வந்த மிரட்டல்களை எல்லாம் தகர்த்தெறிந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006-ல் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு நீதி வழங்கி கொடுத்தார் நீதிபதி சந்துரு.

ஜெய்பீம் படம்
இந்த நிலையில் உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி ஆந்திராவில் பெஸ்வாடா பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்த கூட்டத்தில் உரையாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை துன்புறுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினார். முன்னதாக ஜெய்பீம் படம் குறித்து பேசிய அவர் நான் ஜெயபீம் வழக்குபோல் பல வழக்குகளை விசாரித்துள்ளேன்.

பிழைப்புக்காக போராடுகிறது
ஆனால் இந்த வழக்கில் உள்ள வித்தியாசம் என்னவென்றால் அந்த இருளர் பெண்ணுக்குரிய நீதியை, உண்மையை நீதிமன்றத்தில் கொண்டு சென்று நிலைநாட்டியது தான். ஜெய்பீம் எந்த ஹீரோசத்தையோ கொண்டுள்ளது கிடையாது. நீதிக்காக போராடும் மனிதனின் போராட்டம்தான் அது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:- தற்போதைய சூழ்நிலையில் ஆந்திர அரசு தனது பிழைப்புக்காக போராடுகிறது. அமராவதியில் நில மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட எஃப்ஐஆரை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஏனெனில் அங்கு நீதிபதிகள் கடந்த அரசு மூலம் வீட்டு மனைகளின் பலன்களைப் பெற்றுள்ளனர்.

மிகவும் துரதிர்ஷ்டவசமானது
நீதிபதிகளும் பயனாளிகள் என்பதால் அந்த வழக்குகளை விசாரித்திருக்கக் கூடாது. அதனால்தான் அவர்கள் ஆந்திர அரசின் எஃப்ஐஆரை ரத்து செய்துவிட்டனர். ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துவிடுவோம் என அச்சுறுத்துகிறார்கள், இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது' என்று நீதிபதி சந்துரு கூறினார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications