100 வயதாகும் மோடியின் தாயார் பெயரில் சாலை! காந்தி நகர் மாநகராட்சி அதிரடி! குஜராத்தில் நெகிழ்ச்சி
காந்தி நகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் சாலை ஒன்றுக்குப் பிரதமர் மோடியின் தாயார் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் 14ஆவது பிரதமராகக் கடந்த 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களவையில் ஒரு கட்சியைத் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வைத்த பெருமை மோடியையே சேரும்.

உலக அளவில் இருக்கும் முக்கிய தலைவர்களில் ஒருவராக நரேந்திர மோடி திகழ்கிறார். அவரது தாயார் ஹிராபா இப்போது குஜராத் மாநிலத்தில் வசித்து வருகிறார்.
99 வயதாகும் ஹிராபாவுக்கு வரும் சனிக்கிழமை (ஜூன் 18) தனது 100ஆவது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். இந்தச் சூழலில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள சாலை ஒன்றுக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயரை வைக்க அம்மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவின் பெயர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கச் செய்யவும் வருங்கால சந்ததியினர் அவரிடம் இருந்து பாடம் கற்கும் வகையிலும் அவரது பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காந்திநகர் மேயர் ஹிதேஷ் மக்வானா வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹிராபாவுக்கு 100 வயதாகிறது, மக்களின் கோரிக்கை மற்றும் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இங்குள்ள சாலைக்கு ஹிராபா பெயர் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சாலை "புஜ்யா ஹிராபா மார்க்" என்று அழைக்கப்படும் வருங்கால சந்ததியினர் ஹிராபாவின் துறவு, தவம், சேவை குறித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
கைமாறிய 12 வருட மனைவி.. குஜராத் கணவர் தந்த புகாரில் செம ட்விஸ்ட்.. அலறியடித்து ஓடிய 10 பேர் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications