வங்கி மோசடி.. ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி அதிரடி கைது!
கான்பூர்: வங்கி கடன் மோசடி தொடர்பாக, ரோட்டோ மேக் பென் நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி, மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. மேலும், கான்பூரிலுள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
வைர வியாபாரி நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி முறைகேடு செய்த புகார் நாட்டை உலுக்கி வரும் நிலையில், பிரபலமான ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு ரூ 800 கோடி கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் எழுந்தது. அவர் வெளிநாடு தப்பி விட்டதாகவும் செய்திகள் வந்தன.

இதனிடையே தான், கான்பூரில்தான் இருப்பதாக விக்ரம் கோத்தாரி ஒரு விளக்கத்தை அளித்திருந்தார். இந்த மோசடி புகார் வெளியே தெரியவந்துள்ள நிலையில் சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. கான்பூரில் விக்ரம் கோத்தாரியின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 3 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.
#UPDATE: Latest visuals from from Rotomac Pens owner #VikramKothari residence as CBI raid is underway. pic.twitter.com/6R0NBW6cKO
— ANI UP (@ANINewsUP) February 19, 2018
ரெய்டு ஒரு பக்கம் நடந்தபோது, விக்ரம் கோத்தாரியை சிபிஐ கைது செய்துள்ளது. நீரவ் மோடி போல விக்ரம் கோத்தாரியும் தப்பிவிட கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கைது நடவடிக்கை பாய்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே விக்ரம் கோத்தாரி, மொத்தமாக ரூ.4,232 கோடி ரூபாய் கடன் மோசடி செய்து இருக்கிறார் என்று கண்டுபிடிக்கப்பட்டதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான வட்டியோ, அசலோ ஒருவருடம் ஆகியும் கூட, 1 ரூபாய் கூட கொடுக்கவில்லை. இவர் மொத்தம் 5 வங்கிகளில் கடன் வாங்கி இருக்கிறார். இவர் கொடுத்த 600 ரூபாய் செக் கூட பவுன்ஸ் ஆகி திரும்ப வந்து இருக்கிறது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications