ரூ.50,000 கோடி.. பணமதிப்பிழப்பு பாதிப்புக்கு பிறகு மத்திய அரசுக்கு ஒரு நிம்மதி தகவல்!
டெல்லி: ரிசர்வ் வங்கியின் சட்டப்படி சொத்துக்களின் தேய்மானம், வாராக்கடன் ஊழியர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட சில செலவீனங்களுக்கு பிறகு எஞ்சிய லாபத்தை மத்திய அரசுக்கு தர வேண்டும். இதன்படி 2018-19ம் நிதியாண்டுக்கு 50 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது. ஏனெனில் கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி 30 ஆயிரத்து 659 கோடிகளை மட்டுமே மத்திய அரசுக்கு அளித்தது. ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டான 2016-17ல் ரிசர்வ் வங்கி 66 ஆயிரத்து 876 கோடியை மத்திய அரசுக்கு வழங்கி இருந்தது.

இதன்படி, கடந்த நிதி ஆண்டில் இதில் பாதி தொகை தான் மத்திய அரசுக்கு கிடைத்தது. 2011-12 ஆண்டுக்கு பிறகு வழங்கப்பட்ட மிகக் குறைவான பங்குத்தொகை அதுவாகும்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து. அதன் விளைவாக புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது, கூடுதல் பணத்தை இருப்பு வைப்பது, போன்றவற்றால் ரிசர்வ் வங்கி கூடுதலாக செலவானது தான் கடந்த ஆண்டு பங்கு தொகையை குறைந்ததற்கு காரணம், என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
83 வருட வரலாற்றில் 2015-16ம் நிதியாண்டில்தான் ரிசர்வ் வங்கி அதிகபட்ச பங்கு தொகையை மத்திய அரசுக்கு வழங்கி இருந்தது. அந்த நிதி ஆண்டில் 66 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு வழங்கியது ரிசர்வ் வங்கி. ஆனால் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், இந்த பங்குத் தொகையில் பெரும் சரிவை சந்தித்தது மத்திய அரசு.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications