சசிகலாவுக்கு சிறையில் சலுகை... விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்க லஞ்சம் பெற்றது தொடர்பான விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வினய்குமார் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை கைதி சசிகலாவிற்கு சலுகை வழங்கியது தொடர்பான புகாரை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு இன்னும் சில தினங்களில் அரசிடம் அறிக்கையை அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு மருத்துவம், அறையில் வசதிகள், பணியாட்கள் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்காக அவர் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண ராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு பின்னர் ஓய்வு பெற்றார்.

சசி லீக்ஸ்
ஊடகங்களில் சசிகலாவின் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. விதிகளை மீறி சசிகலாவும், இளவரசியும் சிறையை விட்டு வெளியே சென்று வந்தது தெரியவந்தது. சசிகலா தினசரியும் இஷ்டம் போல தனக்கு பிடித்த உணவுகளை சமைத்து சாப்பிட்டதும் அம்பலமானது.

டிஐஜி ரூபா புகார்
இந்த சம்பவம் மாநில காவல்துறையில் புயலை கிளப்பியது. டிஐஜி ரூபா கொடுத்துள்ள புகார் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் சிறப்பு விசாரணை படை அமைக்கப்பட்டுள்ளது. அவர் விசாரணை நடத்தி வருகிறார்.

வினய்குமார் விசாரணை
புகார் தொடர்பாக 70 சதவீத பணியை வினய்குமார் முடித்துள்ளதாகவும், இரண்டொரு நாளில் டிஐஜி ரூபா மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபி சத்யநாராயணராவ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி விவரம் பெற்றபின், அரசு கொடுத்த ஒருமாத காலகெடுவுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அறிக்கை தயார்
வினய்குமார் தனது விசாரணை அறிக்கையை இன்னும் சில தினங்களுக்குள் அரசிடம் ஒப்படைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு தண்டனை காலம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications