தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மெண்ட் விவகாரம்: சீனியர் நீதிபதிகள் விசாரிக்காதது ஏன்?
தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மெண்ட் விவகாரத்தை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்ச்சில் சீனியர் நீதிபதிகள் இடம்பெறவில்லை.
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்சில் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் 6-வது இடத்தில் இருக்கும் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில்தான் இந்த பெஞ்ச் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர் உள்ளிட்டோரின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபாவில் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் தலைமையில் 70 எம்.பி.க்கள் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இந்த இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் நீதிபதிகள் ஏகே சிக்ரி, எஸ்.ஏ. போப்டே. என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா மற்றும் ஏ.கே. கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்த அரசியல் சாசன பெஞ்சுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி ஏ.கே. சிக்ரி, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் 6-வது இடத்தில் இருப்பவர்.
ஏகே சிக்ரியைவிட மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி. லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர்தான் தலைமை நீதிபதிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் கலகக் குரல் எழுப்பியவர்கள்.
இந்த வழக்கை நீதிபதி செல்லமேஸ்வர், எஸ்.கே. கவுல் பெஞ்ச் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தில் கையெழுத்திட்டவருமான கபில் சிபல் வலியுறுத்தியும் இருந்தார். அப்போது, தலைமை நீதிபதி முன்பு இதைத் தெரிவிக்க நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச் அவரை கேட்டுக் கொண்டது. மேலும் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் ஆகியோரை நாளை மீண்டும் வாருங்கள் எனவும் செல்லமேஸ்வர் பெஞ்ச் தெரிவித்திருந்தது
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications