தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மெண்ட் விவகாரம்: சீனியர் நீதிபதிகள் விசாரிக்காதது ஏன்?
தலைமை நீதிபதிக்கு எதிரான இம்பீச்மெண்ட் விவகாரத்தை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்ச்சில் சீனியர் நீதிபதிகள் இடம்பெறவில்லை.
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக் கோரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன பெஞ்சில் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சீனியாரிட்டி அடிப்படையில் 6-வது இடத்தில் இருக்கும் நீதிபதி ஏ.கே. சிக்ரி தலைமையில்தான் இந்த பெஞ்ச் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்குகளை ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பது மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர் உள்ளிட்டோரின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வகை செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானத்தை ராஜ்யசபாவில் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் தலைமையில் 70 எம்.பி.க்கள் ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம் நோட்டீஸ் அளித்தனர். ஆனால் இந்த இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸை வெங்கையா நாயுடு நிராகரித்தார்.
இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பிக்கள் இருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நியமிக்கப்பட்டுள்ளது.
இதில் நீதிபதிகள் ஏகே சிக்ரி, எஸ்.ஏ. போப்டே. என்.வி. ரமணா, அருண் மிஸ்ரா மற்றும் ஏ.கே. கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்த அரசியல் சாசன பெஞ்சுக்கு தலைமை வகிக்கும் நீதிபதி ஏ.கே. சிக்ரி, உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளில் 6-வது இடத்தில் இருப்பவர்.
ஏகே சிக்ரியைவிட மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர் உள்ளிட்டோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகளான நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகய், எம்.பி. லோகுர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர்தான் தலைமை நீதிபதிக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் கலகக் குரல் எழுப்பியவர்கள்.
இந்த வழக்கை நீதிபதி செல்லமேஸ்வர், எஸ்.கே. கவுல் பெஞ்ச் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞரும் இம்பீச்மென்ட் தீர்மானத்தில் கையெழுத்திட்டவருமான கபில் சிபல் வலியுறுத்தியும் இருந்தார். அப்போது, தலைமை நீதிபதி முன்பு இதைத் தெரிவிக்க நீதிபதி செல்லமேஸ்வர் பெஞ்ச் அவரை கேட்டுக் கொண்டது. மேலும் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், பிரசாந்த் பூஷண் ஆகியோரை நாளை மீண்டும் வாருங்கள் எனவும் செல்லமேஸ்வர் பெஞ்ச் தெரிவித்திருந்தது
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications