நீதிபதி கங்குலிக்கு எதிரான பலாத்கார புகாருக்கு முகாந்திரம் இருக்கு... பட் 'நோ ஆக்சன்: சுப்ரீம் கோர்ட

சட்ட பயிற்சி மாணவி ஒருவர் கடந்த நவம்பர் 6-ந் தேதி தனது வலைத்தள பக்கத்தில் பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவரிடம் தான் பயிற்சி பெற்ற போது, அவர் பாலியல் ரீதியாக தன்னை தொல்லைப்படுத்தியதாகவும், இந்த சம்பவம் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்ததாகவும் எழுதி இருந்தார். சம்பந்தப்பட்ட நீதிபதி தற்போது பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும் அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார்.
இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தானே முன்வந்து, இதுபற்றி விசாரணை நடத்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.டட்டூ, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய 3 நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு 7 முறை கூடி விசாரணை நடத்தி தனது அறிக்கையை கடந்த நவம்பர் 28-ந் தேதி தலைமை நீதிபதியிடம் வழங்கியது.
இதைத்தொடர்ந்து, பலாத்கார புகாரில் சிக்கியவர் நீதிபதி ஏ.கே.கங்குலி என்ற தகவல் வெளியானது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தற்போது மேற்கு வங்காள மாநில மனித உரிமை ஆணையராக பதவி வகித்து வருகிறார்.
பாலியல் புகாரில் தனது பெயர் வெளியானதும் அதை மறுத்தார் நீதிபதி ஏ.கே.கங்குலி. இந்நிலையில், நீதிபதி ஏ.கே.கங்குலி விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாக மாணவி கூறிய புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது.
இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பி.சதாசிவம் வெளியிட்டுள்ள அறிக்கை:
விசாரணையின் போது மாணவி எழுத்து பூர்வமாகவும், வாய்மொழியாகவும் தெரிவித்த கருத்துகளையும், அவரது சாட்சியங்களின் பிரமாண வாக்குமூலங்களையும், நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்த கருத்துகளையும் நாங்கள் கவனத்துடன் ஆய்வு செய்தோம். அதன் மூலம், 24.12.2012-ந் தேதி அன்று நீதிபதி ஏ.கே.கங்குலி தங்கி இருந்த லீ மெரிடியன் ஓட்டலுக்கு அவருக்கு உதவி செய்வதற்காக பெண் வழக்கறிஞர் சென்று உள்ளார். அன்று இரவு 8 மணி முதல் 10.30 மணி வரை அவர் அங்கு இருந்துள்ளார். இந்த உண்மையை விசாரணையின் போது நீதிபதி ஏ.கே.கங்குலி மறுக்கவில்லை என்று நீதிபதிகள் குழு தெரிவித்து உள்ளது.
‘விசாரணையின் போது அந்த பெண் தெரிவித்த கருத்துகளை வைத்து பார்க்கும் போது, நீதிபதி ஏ.கே.கங்குலி விரும்பத்தகாத வகையில் (வாய் வார்த்தை மூலமாகவோ அல்லது வாய் வார்த்தை அல்லாத சைகை மூலமாகவோ) நடந்து கொண்டார் என்ற புகாருக்கு முகாந்திரம் உள்ளது என்றும் கூறி இருக்கிறது.
என்றாலும் மேற்கண்ட சம்பவம் நடப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட நீதிபதி பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். கடந்த 5-ந் தேதி நடந்த முழு நீதிமன்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்த பிரச்சினையில் இந்த நீதிமன்றத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க தேவை இல்லை என்று கருதுகிறோம் என கூறப்பட்டுள்ளது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications