முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இரங்கல் கூட்டம் நடத்தி பள்ளிக்கு 'லீவு' விட்ட முதல்வர்
பலசூர்: ஒடிஷாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி இறந்துவிட்டதாகக் கூறி பள்ளிக்கு முதல்வர் விடுப்பு அளித்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயி அண்மை காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார். இந்நிலையில்

ஒடிஷா மாநிலம் பலசூர் மாவட்டத்தில் உள்ள துவக்கப் பள்ளி ஒன்றின் முதல்வர் கமலகந்தா தாஸ் மற்றொரு பள்ளியில் நடந்த ஆசிரியர்கள் பயிற்சி முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை கலந்து கொண்டார்.
அந்த முகாமில் கலந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் தாஸிடம் வாஜ்பாயி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து தாஸ் பள்ளிக்கு வந்து வாஜ்பாயி இறந்துவிட்டதாகக் கூறி இரங்கல் கூட்டத்தை நடத்தியுள்ளார். அதன் பிறகு பள்ளிக்கு விடுமுறையும் அளித்தார்.
வழக்கத்திற்கு மாறாக குழந்தைகள் சீக்கிரமே வீட்டிற்கு வந்ததற்கான காரணத்தை அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து மாவட்ட கலெக்டர் சனதான் மாலிக்கிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து மாலிக் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தாஸ் சஸ்பெண்ட் செய்யப்படுவார். தேவைப்பட்டால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முன்னதாக ஜார்க்கண்ட் மாநில கல்வித் துறை அமைச்சர் நீரா யாதவ் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உயிரோடு இருக்கையிலேயே அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications