கங்கை வெள்ளத்தில் நின்று செல்ஃபி எடுத்த 7 பேர் நீரில் மூழ்கி பலி
கான்பூர்: கங்கை ஆற்றில் ஓடும் வெள்ளத்தில் நின்று செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் நீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற சென்ற 6 நண்பர்களும் ஒருவர் பின் ஒருவராக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கலோனல்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் சிவம், 19. இவர் கான்பூர் மாவட்டத்தின் ஜூஹி பகுதியைச் சேர்ந்த தனது நண்பர்களான சச்சின் குப்தா ,21, போலு திவாரி 20, ரோஹித்,20, மக்சூத் 31, போலா, 16 சத்யம், 24 ஆகிய 6 பேருடன் நேற்று கங்கை நதியில் குளிக்கச் சென்றார்.

சமீபத்திய மழை காரணமாக நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நதியில் குளித்துக் கொண்டிருந்த சிவம், நீரோட்டம் அதிகமுள்ள பகுதியில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி விழந்ததில் நீரில் மூழ்கத் தொடங்கினார்.
இதையடுத்து அருகில் இருந்த மக்சூத் அவரை காப்பாற்ற முயன் றார். அவரும் நீரில் மூழ்கவே, நண்பர்கள் அடுத்தடுத்து ஒவ் வொருவராக நீரில் குதித்தனர். இந் நிலையில் 7 பேரும் நீரில் மூழ்கினர்.
தகவலின் பேரில் இளைஞர் களை மீட்க நீர்மூழ்கி வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு 7 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கான்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷாலாப் மாத்தூர், பலத்த மழை காரணமாக கங்கை நதியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆழம் அதிகமாக உள்ள பகுதியில் ஏழு இளைஞர்களும் நதியில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, சிவம் என்ற இளைஞர் செல்ஃபி எடுத்ததால் கட்டுப்பாட்டை இழந்து, நதியில் தவறி விழுந்தார்.
அதைத் தொடர்ந்து, அவரைக் காப்பாற்றுவதற்காக நதியில் குதித்த மசூத் என்ற இளைஞரும், மற்ற 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக நதியில் மூழ்கினர். இதையடுத்து, நதியில் மூழ்கிய இளைஞர்களைக் காப்பாற்றுவதற்காக மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தில் குவிந்தனர்.
இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு இளைஞர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அவற்றை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதில், இளைஞர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இவர்களில், சிவம் காலனேல்கஞ்ச் என்ற பகுதியைச் சேர்ந்தவர்; மற்ற ஆறு பேரும் ஜூஹி என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர் என்று ஷாலாப் மாத்தூர் தெரிவித்தார்.
உலகிலேயே இந்தியாவில்தான் செல்ஃபி மரணங்கள் அதிகரித்து வருகின்றன என்று புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜனவரி மாதம் மும்பையில் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்தது. அரபிக் கடல் அருகே உள்ள பாறையில் நின்று செல்ஃபி எடுத்த மூன்று இளம்பெண்கள் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்றச் சென்ற இளைஞரும் கடலில் மூழ்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications