செல்லாத நோட்டு அறிவிப்பு.. ஜனாதிபதியை சந்திக்க மம்தாவுடன் கைகோர்க்கும் சிவசேனா !
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து முறையிட எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
டெல்லி: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் குடியரசுத்தலைவரை சந்திக்கும் குழுவில் சிவசேனாவும் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடி அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனாவும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், சுவிட்சர்லாந்தில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை முதலில் கொண்டு வாருங்கள். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக உள்ளோம். ஆனால் அதை மக்களை கஷ்டப்படுத்தி செய்ய வேண்டாம் என கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்தநிலையில் எதிர்க்கட்சிகள் மோடிக்கு எதிராக ஓரணியில் திரண்டு இன்று தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கடுமையாக விவாதிக்கத் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, மோடியின் அதிரடி நடவடிக்கை குறித்து கடும் கண்டன குரலை எழுப்பி வருகிறார். இதனிடையே ரூபாய் நோட்டு விவகாரத்தில் ஒருமித்த குரல் எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க உள்ளிட்ட 13 கட்சிகள் ஆலோசனை நடத்தின.
அப்போது இன்று குடியரசுத்தலைவரை சந்திக்க ஆலோசனை வழங்கினார் மம்தா ஆனால் இதை தேசிய மாநாட்டுக்கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் ஆமோதித்தன. ஆனால், இதில் பிற கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து இன்றும் எதிர்கட்சிகள் கூடி ஆலோசலை நடத்த உள்ளன. ஒருவேளை குடியரசுத்தலைவரை முதலில் சந்திப்பதாக முடிவு எடுக்கப்பட்டால், மம்தா குழுவுடன் சிவசேனாவும் பங்கேற்கும் என அந்த கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் கூறுகையில், மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைக்காக மம்தா பானர்ஜிடன் ஜனாதிபதியை சந்திக்கும் குழுவில் சிவசேனாவும் பங்கேற்கும் என தெரிவித்துள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிவசேனா மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications