ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையனுடன் நான் போராடியிருக்க கூடாது.. வங்கி பெண் அதிகாரி ஜோதி
பெங்களூர்: பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையனுடன் தாம் போராடியிருக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் வங்கி அதிகாரி ஜோதி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஏ.டி.எம் மையத்தில் கடந்த 19-ந் தேதி பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியான ஜோதியை, ஒரு மர்மநபர் கொடூரமாக தாக்கி விட்டு பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்து சென்றான். கொள்ளையன் தாக்கியதில் தலை, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்தார் ஜோதி. அவர் முதலில் நிமான்ஸ் மருத்துவமனையிலும் பின்னர் கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

மர்மநபரின் கொடூர தாக்குதலில் ஜோதியின் உடலில் வலதுபுறம் முற்றிலும் செயல் இழந்து போனது. அவரை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தனது கணவர், மருத்துவர் ஆகியோரிடம் ஜோதி இயல்பாக பேச தொடங்கினார்.
ஜோதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாலும், அவர் பேச தொடங்கி விட்டதாலும், அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு தனியார் மருத்துவமனை ஏற்பாடு செய்தது. இதனால் நேற்று ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைகாட்சி நிருபர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தார்கள்.
செய்தியாளர்களை சந்தித்த வங்கி பெண் அதிகாரி ஜோதி, நான் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். கொள்ளையனை நான் எதிர்த்து போராடி இருக்கக் கூடாது. அவனிடம் நான் பணத்தைக் கொடுத்திருந்தால் என்னை தாக்கியிருக்க மாட்டான். தற்போது நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கூடிய விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்ப செல்வதையே விரும்புகிறேன். இதற்கு மேல் வேறு எதுவும் என்னால் தெரிவிக்க இயலாது என்றார்.
அதைத்தொடர்ந்து, ஜோதியை மருத்துவர்கள் அங்கிருந்து அழைத்து சென்று விட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications