ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையனுடன் நான் போராடியிருக்க கூடாது.. வங்கி பெண் அதிகாரி ஜோதி
பெங்களூர்: பெங்களூர் ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையனுடன் தாம் போராடியிருக்கக் கூடாது என்று பாதிக்கப்பட்ட பெண் வங்கி அதிகாரி ஜோதி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் ஏ.டி.எம் மையத்தில் கடந்த 19-ந் தேதி பணம் எடுக்க சென்ற வங்கி பெண் அதிகாரியான ஜோதியை, ஒரு மர்மநபர் கொடூரமாக தாக்கி விட்டு பணத்தையும், செல்போனையும் கொள்ளையடித்து சென்றான். கொள்ளையன் தாக்கியதில் தலை, முகத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்தார் ஜோதி. அவர் முதலில் நிமான்ஸ் மருத்துவமனையிலும் பின்னர் கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

மர்மநபரின் கொடூர தாக்குதலில் ஜோதியின் உடலில் வலதுபுறம் முற்றிலும் செயல் இழந்து போனது. அவரை தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், 10 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் தனது கணவர், மருத்துவர் ஆகியோரிடம் ஜோதி இயல்பாக பேச தொடங்கினார்.
ஜோதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாலும், அவர் பேச தொடங்கி விட்டதாலும், அவர் பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கு தனியார் மருத்துவமனை ஏற்பாடு செய்தது. இதனால் நேற்று ஏராளமான பத்திரிகையாளர்கள், தொலைகாட்சி நிருபர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்தார்கள்.
செய்தியாளர்களை சந்தித்த வங்கி பெண் அதிகாரி ஜோதி, நான் உங்களை சந்திப்பதில் மிகவும் சந்தோஷப்படுகிறேன். கொள்ளையனை நான் எதிர்த்து போராடி இருக்கக் கூடாது. அவனிடம் நான் பணத்தைக் கொடுத்திருந்தால் என்னை தாக்கியிருக்க மாட்டான். தற்போது நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கூடிய விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்ப செல்வதையே விரும்புகிறேன். இதற்கு மேல் வேறு எதுவும் என்னால் தெரிவிக்க இயலாது என்றார்.
அதைத்தொடர்ந்து, ஜோதியை மருத்துவர்கள் அங்கிருந்து அழைத்து சென்று விட்டனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications