பெற்றோர் சம்பாதித்து வாங்கிய வீட்டில் மகனுக்கு வாழ உரிமை இல்லை.. டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பெற்றோர் சம்பாதித்து வாங்கிய வீட்டில் சட்டப்படி வாழ மகனுக்கு உரிமை இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: அப்பா, அம்மா சம்பாதித்து வாங்கிய வீட்டில் மகனுக்கு சட்டப்படி வாழ உரிமை இல்லை எனவும், அவர் சொந்தம் கொண்டாட முடியாது எனவும் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெல்லியில் ஓய்வு பெற்ற பெற்றோர்களுடன் அவர்களின் மகன்களும், மகள்களும் வசித்து வந்தனர். நாளடைவில் அவர்கள் தொந்ததரவு கொடுத்ததால் அம்மாவும், அப்பாவும் போலீசில் புகார் அளித்தனர். மகன்களும், மகள்களும் தங்களுடைய வீட்டில் நுழையக் கூடாது என பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்பா, அம்மாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மகன்களும், மகள்களும் சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், தங்களுடைய சம்பாத்தியத்தில் வாங்கியதாக அப்பா கூறும் வீட்டை, வாங்க நாங்களும் பணம் கொடுத்ததாக கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சிவில் நீதிமன்றம் பெற்றோருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதனைத் எதிர்த்து மகன்களில் ஒருவரும் அவரது மனைவியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பிரதீபா ராணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வீட்டை வாங்கவும் கட்டவும் மகன் பணம் கொடுத்ததாக நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் மகன் நீதிமன்றத்தில தாக்கல் செய்யவில்லை.
எனவே சுய சம்பாத்தியத்தில் பெற்றோர் கட்டிய வீட்டில் வசிக்க மகன், மகள்களுக்கு உரிமை இல்லை. பெற்றோர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் ஆயுட்காலம் வரை இருந்து கொள்ளலாம். ஆனால் சட்டப்படி அந்த வீட்டை பிள்ளைகள் உரிமை கொண்டாட முடியாது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications