தினகரன் லஞ்ச வழக்கு.. சுகேஷ் சந்திரசேகரை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி
இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக தினகரனிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரை 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த போலீசுக்கு, டெல்லி நீதிமன
டெல்லி: டெல்லி: இரட்டை இலை சின்னத்தை பெற்று தர தேர்தல் ஆணையத்துக்கு வழங்குவதற்கு ரூ.1.30 கோடி லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டுள்ளார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக சசிகலா, ஓபிஎஸ் தரப்பினரிடம் தேர்தல் ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு இருப்பதாக கூறப்படும் சுகேஷ் சந்திரசேகரிடம், தினகரன் ரூ.60 கோடி பேரம் பேசி முன்தொகையாக ரூ.1.30 கோடி கொடுத்ததாக டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷை கைது செய்த போலீஸார் அவரிடம் இருந்த ரூ.1.30 கோடி பணம், 2 சொகுசு கார்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து விசாரணைக்குப் பின்னர் சுகேஷை டெல்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு இன்று ஆஜர்படுத்தினர். அப்போது நடைபெற்ற விசாரணையில் சுகேஷை 8 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே கைதான சுகேஷ் சந்திரசேகரரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நாளை தினகரன் விசாரிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணைக்குப் பின்னர் அவரும் கைது செய்யப்படுவார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications