மாலத்தீவில் வரும் நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாலே: மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் செல்லாது எனவும், வரும் நவம்பர் 3ம் தேதிக்குள் மறுதேர்தல் நடத்த வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவில், கடந்த 30 ஆண்டுகளாக மமூன் அப்துல் கயூம் என்பவரே அதிபராக இருந்து வந்தார். அதன்பிறகு, கடந்த 2008-ம் ஆண்டு பல கட்சிகள் பங்கேற்ற முதலாவது ஜனநாயக தேர்தல் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில், மாலத்தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் முகமது நஷீத் வெற்றி பெற்று அதிபரானார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அதிபராக இருந்த நஷீத், கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த ராணுவப்புரட்சி காரணமாக பதவி விலகினார். அவரைத் தொடர்ந்து துணை அதிபராக இருந்த முகமது வகீத், மாலத்தீவின் அதிபரானார்.

இந்நிலையில், கடந்த மாதம் 7ம் தேதி மாலத்தீவில் 2-வது முறையாக அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், தற்போதைய அதிபர் முகமது வகீத், முன்னாள் அதிபர் முகமது நஷீத், முன்னாள் அதிபர் கயூமின் சகோதரரும், மாலத்தீவு முற்போக்கு கட்சி வேட்பாளருமான அப்துல்லா யாமீன், ஜமூரி கட்சி வேட்பாளர் காசிம் இப்ராகிம் ஆகியோர் போட்டியிட்டனர்.
மாலத்தீவின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரம். 192 தீவுகள், 40 ரிசார்ட்டுகள் ஆகியவற்றில் 470 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது.
வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தலில் முன்னாள் அதிபர் முஹம்மது நஷீத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவின் போது ஏகப்பட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தனர் எதிர்க்கட்சிகள்.
வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல் செல்லாது எனவும், எனவே வரும் நவம்பர் மாதம் 3ம் தேதிக்குள் மாலத்தீவில் மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications