ஜூலை 28ல் நடக்கவிருந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தல் ஒத்திவைப்பு! உச்சநீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்: பெங்களூர் மாநகராட்சி தேர்தலை 8 வாரங்கள் ஒத்திவைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு்ள்ளது. எனவே, இம்மாதம் 28ம் தேதி நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிப்போகிறது.
பெங்களூர் மாநகராட்சியின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை 28ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூன் 25 முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கும் வந்துவிட்டன.
இந்நிலையில், 2011ம் ஆண்டு வெளியாகியுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு படி வார்டுகளை பிரிக்கவும், வாக்காளர் பட்டியலை தயாரிக்கவும் கால அவகாசம் வேண்டும் என்று கேட்டு மாநில அரசு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணை நடத்திய நீதிமன்றம், 2001ம் ஆண்டு வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தேர்தலை நடத்துங்கள்., புதிய பட்டியல் தேவையில்லை என்று உத்தரவிட்டது. ஆனால், தேர்தலை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாநில அரசின் கோரிக்கையில் பாதியை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மறுபாதியை தள்ளுபடி செய்துள்ளது. பட்டியலை மாற்ற வேண்டாம் என்று நீதிபதிகள் கூறிய நிலையில், பிறகு எதற்காக தேர்தல் தேதியை ஒத்திவைத்தனர் என்பதற்கான விளக்கம் தரப்படவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவால், அக்டோபர் 5ம் தேதிவரை கர்நாடக அரசுக்கு கால அவகாசம் கிடைத்துள்ளது. இதுகுறித்து முன்னாள் அமைச்சர் சுரேஷ்குமார் (பாஜக) கூறுகையில், "உச்சநீதிமன்ற உத்தரவு வித்தியாசமாக உள்ளது. தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு ஒரு தேர்தல் தளளிப்போவது கேள்விப்படாத விஷயமாக உள்ளது" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications