விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் கெடு
விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. விவசாயிகளின் தற்கொலை விவகாரம் மிக கவலைக்குரிய பிரச்சனை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் தற்கொலையை தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கெஹர் தலைமையிலான நீதிபதிகள் பெஞ்ச், விவசாயிகளின் தற்கொலை விவகாரம் மிக கவலைக்குரிய பிரச்சனை மட்டுமல்லாது நாட்டின் மிக மிக முக்கியமான பிரச்சனை என்று குறிப்பிட்டது.

நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்திருப்பது கவலை அளிக்க கூடிய விஷயம் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வேதனை தெரிவித்துள்ளது. அப்போது விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும்விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தர வேண்டும் என்றும், 4 வாரங்களுக்குள் இவ்விகாரத்தில் செயல் திட்டத்துடன் கூடிய விளக்கமான பதில் தங்களுக்கு வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு விதித்துள்ளது.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications