அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை..சேகர்பாபுவுக்கு கூடுதல் பொறுப்பு
சென்னை: தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சேகர்பாவுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சர்கள் 34 பேர் ஏற்கனவே உள்ள நிலையில் 35ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் தமிழக அமைச்சர்கள் 10 பேரின் இலாக்காக்கள் மாற்றப்பட்டுள்ளன. சிலருக்குக் கூடுதல் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு காதி கிராம நலத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறையும் சுற்றுலா துறை அமைச்சராக அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்து முத்துச்சாமிக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவை மாற்றம்: யாருக்கு எந்த துறை? கூடுதல் பொறுப்பு யாருக்கு?
அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சிறப்பு அமலாக்கத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கீடு
வனத்துறை அமைச்சராக இருந்த ராமச்சந்திரனுக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கீடு
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனுக்கு கதர் மற்றும் கிராம தொழில் வாரியம், சீர்மரபினர் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமனம்
சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தனுக்கு வனத்துறை ஒதுக்கீடு
விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மெய்யானாதன், சுற்றுசூழல் துறை தொடர்ந்து கவனிப்பார்
அமைச்சர் சேகர் பாபுவிடம் கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் எஸ்.முத்துசாமிக்கு வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை ஒதுக்கீடு
அமைச்சர் ஆர். காந்திக்கு கைத்தறி, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை பழனிவேல் தியாகராஜனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் வரலாம் என்று கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி வந்தன. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி தனக்கு வேறு துறை வேண்டும் என்று பல மாதங்களாகவே கோரிக்கை விடுத்து வந்தார். அவருக்கு ஊரக வளர்ச்சித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் மகிழ்ச்சியடைவார் என நம்பலாம். அதே போல ஐ.பெரியசாமி வசம் இருந்த புள்ளியியல் துறை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகரனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
-
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி! -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி












Click it and Unblock the Notifications