வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு
டெல்லி: தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் குழு, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து இலங்கை பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
தமிழக பாஜக தலைவர், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதர்ராவ், முன்னணி தலைவர்கள் இல.கணேசன், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், எச்.ராஜா, மோகன்ராஜுலு ஆகியோர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்தனர்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் பத்திரிகையாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கடல் எல்லையில் சந்தித்து வரும் பிரச்சினைகள், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, இந்தியாவுக்கு வரும் இலங்கை அகதிகள் ஆகிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம். தமிழக மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதில் வெளியுறவுத்துறை மந்திரி மிகவும் ஆர்வமாக இருக்கிறார். மீனவர்களின் பிரச்சினை குறித்து அவர் தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதில் பிரதமர் மோடி குறிப்பாக இருக்கிறார்.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்கள், உரிமைகளை இழந்திருக்கிற மலையகத் தமிழர்கள், இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள் குறித்தும் எடுத்துச்சொன்னோம். தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கும் வகையில் அங்கு சட்ட திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம்.
16ம் தேதி சென்னையில் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மீனவர்களுடன் சந்திப்பு நடக்க இருக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சருடன் தமிழக மீனவர்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு இல.கணேசன் கூறினார்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications