ஜல்லிக்கட்டு: தீர்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய உச்சநீதிமன்றம்- தடையை மீறும் தமிழகம்?
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனே தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது,
தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இது தமிழரின் பண்பாட்டு அடையாளம்.
ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளை காட்சிபடுத்த தடை விதிக்கப்பட்ட 'விலங்குகள்' பட்டியலில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு சேர்த்திருக்கிறது. இதனை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கொந்தளிப்பு
தற்போதைய பாஜக அரசும் காட்சிபடுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க முன்வரவில்லை. இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில்...
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் வரும் தீர்ப்பைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என மத்திய அரசு கூறிவந்தது.

கைவிரித்த சுப்ரீம்கோர்ட்
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத்திடம் வழக்கறிஞர்கள் இன்று கோரிக்கை வைத்தனர். ஆனால் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் இடைக்கால தீர்ப்பு எதுவும் வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துவிட்டது.

மாணவர்கள் போராட்டம்
இதனால் சட்டப்பூர்வமாக ஜல்லிக்கட்டு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.

தடையை மீறும் தமிழகம்
இந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு தமிழகத்தில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications