எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
சம்பா பள்ளத்தாக்கில் ஊடுருவிய தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர் : ஜம்மு அருகே ஊடுருவிய தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்திய கொடுத்த பதிலடித் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்முவிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நக்ரோட்டா பகுதியில் ஜம்முவுக்கான பாதுகாப்பு படையின் தலைமையகம் உள்ளது. இங்கு இன்று காலை ஊடுருவிய தீவிரவாதிகள், ராணுவ முகாம்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு, கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 2 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து ராணுவத்தினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே தற்போது வரை கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. 2 அல்லது 3 தீவிரவாதிகள் அங்கு பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சண்டையால் அங்கு பதற்றம் நீடிப்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மூடப்பப்பட்டுள்ளன.
சம்பா செக்டாரில் உள்ள ராம்கார்க் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவில் தீவிரவாதிகள் ஊடுறுவ முயன்றதை ஏற்கனவே இந்திய ராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக இன்று ஊடுருவிய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் மாதம் உரி பகுதியில் ஊடுருவிய தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேரை சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications