பஞ்சாப் நெடுஞ்சாலைகளில் இனி சரக்கு கிடைக்கும்... சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
நெடுஞ்சாலைகளில் மதுவிற்பனை தொடர்பான சட்ட திருத்தம் பஞ்சாப் சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்டது..
பஞ்சாப் சட்டசபையில் நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டல், உணவகங்கள் மற்றும் கிளப் ஆகியவற்றில் மதுபானம் வழங்குவதற்கான சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாபில் நெடுஞ்சாலைகளில் உள்ள ஹோட்டல்கள், கிளப்புகளில் மதுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ள மதுக்கடைகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் மூட வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அத்துடன், நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்கு அடுத்து மதுக்கடைகள் உள்ளன என்ற விளம்பரம் எதையும் வைக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவில் சில திருத்தங்கள் செய்யக்கோரி தமிழகம், கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மேலும் சில மாநில அரசுகள் மற்றும் மதுக்கடை உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது மது கடைகளை மூட போதிய கால அவகாசம் தந்திருப்பதால் இனியும் அவகாசம் தர முடியாது என்றும் உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் பஞ்சாப் சட்டசபையில் நெடுஞ்சாலைகளில் மது விற்பனை செய்யும் சட்ட திருத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications