பாலம் 10 வருஷம் தாங்கும்ங்க! வாக்குறுதி தந்த பராமரிப்பு நிறுவனம்.. நாலே நாளில் அறுந்து விழுந்த அவலம்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தின் மோர்பியில் கேபிள் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் சுமார் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த பாலத்தை பராமரித்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள், பாலம் 8-10 ஆண்டுகள் வரை உறுதியாக இருக்கும் என்று கூறியிருந்தனர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே போல இந்த மொத்த பாலத்தையும் 100% புனரமைக்க வெறும் ரூ.2 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்திருக்கிறது.

விபத்து
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மிக பழமையான கேபிள் பாலம் ஒன்று உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கேபிள் பாலத்தை அம்மாநில அரசு சமீபத்தில் புனரமைத்து கடந்த 26ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று புதியதாக திறக்கப்பட்ட பாலத்தை சுற்றி பார்க்க மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். சுமார் 500க்கும் அதிகமானோர் வந்திருந்த நிலையில் பாலம் திடீரென அறுந்து விழுந்துள்ளது. இதில் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் மக்களை மீட்பதற்குள் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கின.

பலி
சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் 97 பேர் உயிரற்ற வெறும் உடல்களாக மீட்கப்பட்டனர். இரவு தொடங்கிய மீட்புப்பணி தற்போது வரை நடைபெற்று வருகிறது. காலை நிலவரப்படி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தை பராமரிக்க ஒப்பந்தம் செய்த 'ஓரேவா குழுமத்தின்' நிர்வாக இயக்குநர் சமீபத்தில் பாலம் குறித்து அளித்த பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், "இந்த பாலம் நிச்சயம் அடுத்த 8-10 ஆண்டுகள் வரை தாங்கும்" என்று கூறியிருந்தார்.

பேட்டி
தொடர்ந்து பேசிய அவர், "இந்த பாலம் அதிக தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் இல்லாத காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் மரங்களை கொண்டே பாலம் கட்டப்பட்டுள்ளது. பின்னர் நாங்கள் நவீன கருவிகளை கொண்டு பாலத்தை புனரமைத்தோம். அதேபோல இதில் பயணிக்க விரும்புவர்களுக்கு நுழைவுச் சீட்டும் வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் எண்ணிக்கையையும் எங்களால் கட்டுப்படுத்த முடிந்தது. தற்போது வரை மாலை 6-6:30 மணிவரை மட்டுமே இதில் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பராமரிப்பு
ஆனால் இரவிலும் பயணிகளின் வருகையை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வந்தன. எனவே விளக்குகளை அமைத்து இரவிலும் பாலத்தை பயன்பாட்டு விட நாங்கள் யோசித்திருக்கிறோம்." என கடந்த 24ம் தேதி ஓரேவா குழுமத்தின் நிறுவனர் ஜெய்சுக்பாய் படேல் குஜராத்தின் உள்ளூர் செய்தி தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்திருக்கிறார். ஆனால் இம்மாதிரியான பாலங்கள் பராமரிக்க குறைந்தபட்சம் 8 மாதங்கள் முதல் அதிகபட்சம் 12 மாதங்கள் வரை ஆகும் என கட்டுமான பொறியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்த பாலம் சுமார் 7 மாதங்கள் வரை புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. பாலத்தை 100 சதவிகிதம் முழுமையாக புனரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மிகக்குறைந்த தொகை என்றும் பொறியாளர்கள் கூறுகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications