நீ அந்தப் பக்கம் போ.. நீ இந்தப் பக்கம் வா.. சுத்தி வளைங்கப்பா.. எய்ம்ஸில் குரங்கு வேட்டை!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மக்களை கடித்து அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிக்க 17 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி : நோயாளிகள் அதிக அளவில் வந்து செல்லும் எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுமக்களை கடித்து அச்சுறுத்தி வரும் குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள், நோயாளிகள் உள்பட அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 15 தினங்களாக குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. மருத்துவமனைக்குள் யாரும் நிம்மதியாக சென்று வரமுடியவில்லை என்பதோடு, கேண்டீனிலும் உட்கார்ந்து சாப்பிடமுடியவில்லை என்று புலம்புகின்றனர் மக்கள்.
சுதந்திரமாக சுற்றித்திரியும் இந்தக் குரங்குகள் ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 10 பேரையாவது கடித்து வைத்து விடுகிறதாம்.

120 பேருக்கு கடி
இதே போன்று கடந்த 15 நாளில் மருத்துவர்கள், நர்சுகள், நோயாளிகளின் உறவினர்கள் என்று 120 பேரின் சதைகளை பதம் பார்த்துள்ளது. நோயாளிகளை பார்க்க வருபவர்கள் குரங்குக் கடிக்கு வைத்தியம் பார்த்து செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

தெரு நாய்கள் தொல்லை வேறு
இதே போன்று மருத்துவமனைக்குள் தெரு நாய்களின் தொல்லையும் தாங்க முடியவில்லையாம். எனவே விலங்குகளை பிடிப்பதற்காக 17 பேரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். இவர்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கண்காணிப்புப் பணியில் ஈடுபட ஊற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோடிக்கு கடிதம்
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குள் செல்லும் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் குரங்கு, நாய்களைக் கண்டு அச்சத்துடனே நடமாடி வருகின்றனர். எனவே இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக அனைவரையும் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேனகா காந்தி தலையிட கோரிக்கை
இதே போன்று மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் இந்த விவகாரத்தில் தலையிட வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் விலங்குகளை பிடிப்பது குற்றம் என்று சட்டம் சொல்வதால் நடைமுறை சிக்கல்களை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications