தலித் விவசாயிகளை லத்தியால் அடிக்கும் போலீசார்...கதறும் குழந்தைகள்...மபி கொடூரம்!!
குணா: மத்தியப்பிரதேச மாநிலத்தில் தங்களது வயலில் விளைந்து இருக்கும் பயிர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அழிப்பதை தடுத்த தலித் விவசாய தம்பதிகள் மீது போலீசார் லத்தியால் கடுமையாக தாக்கினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி மத்தியப்பிரதேச அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் 5.5 ஏக்கர் நிலத்தில் அஹிர்வார், சாவித்திரி தம்பதிகள் விவசாயம் செய்து இருந்தனர். திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பயிர்களை அழித்தனர். இதற்கு அந்த தம்பதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அங்கு இருந்த போலீசார் அவர்களை கடுமையாக லத்தியால் தாக்கினர்.

இவர்களை தாக்கும்போது அங்கு நின்று கொண்டு இருந்த அவர்களது குழந்தைகள் இதைத் தடுக்க முன் வந்தனர். ஆனால், போலீசார் அவர்களை பிடித்து தள்ளினர். இதையடுத்து அந்த தம்பதிகள், கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர். உடனடியாக இவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலம் கல்லூரி கட்டுவதற்காக அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நிலம் யார் என்பது எங்களுக்குத் தெரியாது, பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலத்தின் பெரும்பாலான பகுதியை காப்பு பார்டி என்பவர் ஆக்கிரமித்து, தனக்கு சொந்தம் செய்து கொண்டதாகவும், இது அரசுக்கு தெரியாமல் இருப்பதற்காக இந்த தம்பதிகளுக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் அந்த பகுதியில் இருந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கு பெரும்பான்மையான இடங்களை காப்பு ஆக்கிரமித்து தனக்கு சொந்தமாக்கி வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தம்பதிகள் மருந்து குடித்தவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் அதிகாரிகள் செயல்பட்டதால் இருவரும் தப்பினர் என்று மாவட்டக் கலெக்டர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ''இவர்களது மனநிலை மற்றும் அநீதிக்கு எதிராக நமது யுத்தம்'' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். குணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியஜோதிராதித்யா சிந்தியா பலமுறை வெற்றி பெற்றுள்ளார்.
हमारी लड़ाई इसी सोच और अन्याय के ख़िलाफ़ है। pic.twitter.com/egGjgY5Awm
— Rahul Gandhi (@RahulGandhi) July 16, 2020
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த ஜோதிராத்திய சிந்தியா, ''இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எஸ்பி, கலெக்டர் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications