தலித் விவசாயிகளை லத்தியால் அடிக்கும் போலீசார்...கதறும் குழந்தைகள்...மபி கொடூரம்!!
குணா: மத்தியப்பிரதேச மாநிலத்தில் தங்களது வயலில் விளைந்து இருக்கும் பயிர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் அழிப்பதை தடுத்த தலித் விவசாய தம்பதிகள் மீது போலீசார் லத்தியால் கடுமையாக தாக்கினர். இந்த வீடியோ தற்போது வைரலாகி மத்தியப்பிரதேச அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் குணா என்ற இடத்தில் 5.5 ஏக்கர் நிலத்தில் அஹிர்வார், சாவித்திரி தம்பதிகள் விவசாயம் செய்து இருந்தனர். திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பயிர்களை அழித்தனர். இதற்கு அந்த தம்பதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அங்கு இருந்த போலீசார் அவர்களை கடுமையாக லத்தியால் தாக்கினர்.

இவர்களை தாக்கும்போது அங்கு நின்று கொண்டு இருந்த அவர்களது குழந்தைகள் இதைத் தடுக்க முன் வந்தனர். ஆனால், போலீசார் அவர்களை பிடித்து தள்ளினர். இதையடுத்து அந்த தம்பதிகள், கையில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தனர். உடனடியாக இவர்கள் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிலம் கல்லூரி கட்டுவதற்காக அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த நிலம் யார் என்பது எங்களுக்குத் தெரியாது, பல ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருவதாக அந்த தம்பதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலத்தின் பெரும்பாலான பகுதியை காப்பு பார்டி என்பவர் ஆக்கிரமித்து, தனக்கு சொந்தம் செய்து கொண்டதாகவும், இது அரசுக்கு தெரியாமல் இருப்பதற்காக இந்த தம்பதிகளுக்கு ரூ. 3 லட்சம் கொடுத்து இருப்பதாகவும் அந்த பகுதியில் இருந்த மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இங்கு பெரும்பான்மையான இடங்களை காப்பு ஆக்கிரமித்து தனக்கு சொந்தமாக்கி வந்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
தம்பதிகள் மருந்து குடித்தவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் அதிகாரிகள் செயல்பட்டதால் இருவரும் தப்பினர் என்று மாவட்டக் கலெக்டர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ''இவர்களது மனநிலை மற்றும் அநீதிக்கு எதிராக நமது யுத்தம்'' என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். குணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியஜோதிராதித்யா சிந்தியா பலமுறை வெற்றி பெற்றுள்ளார்.
हमारी लड़ाई इसी सोच और अन्याय के ख़िलाफ़ है। pic.twitter.com/egGjgY5Awm
— Rahul Gandhi (@RahulGandhi) July 16, 2020
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்த ஜோதிராத்திய சிந்தியா, ''இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. எஸ்பி, கலெக்டர் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
-
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications