வேளாண்துறைக்கு 10 முக்கிய அறிவிப்புகள்.. மத்திய பட்ஜெட்டில் வெளியீடு!
வேளாண்துறைக்கு 10 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு தனது பொது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி: வேளாண்துறைக்கு 10 முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு தனது பொது பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான 5 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
விவசாயிகளின் வருமானத்தை 2020க்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர்க்கடன் இலக்கு 11 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு
பயிர் உற்பத்திச்செலவு போல் ஒன்றரை மடங்காக குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் சந்தைகளை மேம்படுத்த 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கால்நடை வளம் - நிதி
இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த 500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளளது. மீன்வளம், கால்நடை வளம் மேம்பாட்டுக்கு 10,000 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூங்கில் வளர்ச்சி திட்டம்
மீன்பிடித் தொழிலுக்கும் கிசான் கார்டு திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மூங்கில் வளர்ச்சித் திட்டத்துக்கு 1290 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணாடி இழை தகவல்
தக்காளி, உருளை கிழங்கு, வெங்காயம் விலை சீராக பராமரிக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் கிராம ஊராட்சிகளுக்கு கண்ணாடி இழை தகவல் தொடர்பு வசதி செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.