உ.பி., பஞ்சாப்பை விடுங்க.. இழுபறி கணிப்புகளால் பரபரப்பை கிளப்புகிறது கோவா, உத்தராகண்ட்! என்னாகும்?
பானாஜி: உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக இருந்துவந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிற மாநில மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி உத்தரப்பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும், பஞ்சாபில் முதல் முறையாக ஆம் ஆத்மியும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஆனால், உத்தராகண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் இம்முறை இழுபறி நீடிக்கும் என்பதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சிப்பூசல் காரணமாக 3 முதலமைச்சர்கள் மாறும் நிலை ஏற்பட்டது. இது மக்களிடையே ஆட்சியின் மீதும், பாஜகவின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உத்தராகண்ட்
அதையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட உத்தராகண்ட் மாநிலத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி காங்கிரஸ் - பாஜக ஆகிய கட்சிகள் சமமான அளவில் தொகுதிகளை பங்கிட்டுக்கொள்ளும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் அங்கு தனித்துப் போட்டியிட்டுள்ள ஆம் ஆத்மி மற்றும் இதர மாநில கட்சிகளே கிங் மேக்கராக இருப்பார்கள் என கருதப்படுகிறது.

கோவா நிலவரம்
இதே நிலைமைதான் கோவாவிலும் நிலவுகிறது. முதலமைச்சராக இருந்த முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு பின்னர் அவரது மகனுக்கு முக்கியத்துவம் தராதது பாஜகவுக்குள் உட்கட்சிப் பூசலாகவே உருவெடுத்தது. இந்த நிலையில் தேர்தலை சந்தித்துள்ள பாஜக, காங்கிரஸுக்கு சமமான இடங்களில் வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கட்சி தாவல்கள்
கடந்த முறை காங்கிரஸை விட குறைவான இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, சுயேட்சைகள் மற்றும் ஓரிரு இடங்களில் வென்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 17, பாஜக 13 தொகுதிகளில் வென்றபோதிலும், பாஜகதான் ஆட்சியமைத்தது. கடந்த முறையே குதிரை பேர நாடகங்களை சந்தித்த கோவாவில் அதிக இடங்களில் வெற்றிபெற்றும் ஆட்சி அமைக்க முடியாத காங்கிரஸ் கட்சி, இம்முறை தேர்தலுக்கு முன்பாகவே வேட்பாளர்களை வழிபாட்டு தலங்களுக்கு அழைத்துச் சென்று சத்தியப் பிரமானம் வாங்கியது.
Recommended Video

பரபரப்பு
குதிரை பேரத்தை தவிர்க்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏற்கனவே ரகசிய இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்றைய நாளின் முடிவில் ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக இருக்கப்போவது உத்தரப்பிரதேசமோ, பஞ்சாபோ அல்ல... அதிகம் கண்டுகொள்ளப்படாத உத்தராகண்டும், கோவாவும்தான்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications