மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல்
கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ அலுவலகம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசிப் போராட்டம் நடத்தினர். அத்துடன் மாநில அரசின் அனுமதி பெறாமல் அமைச்சர்களை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர்.
Recommended Video
போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக நாரதா செய்தி இணையதளம் வீடியோ, படங்களை வெளியிட்டது. இதனடிப்படையில் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

மமதா பானர்ஜி சவால்
இந்த விசாரணையைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் இன்று காலை சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து சிபிஐ அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்களை கைது செய்ததைப் போல எங்கே என்னையும் கைது செய்யுங்கள் என சிபிஐ அதிகாரிகளிடம் மமதா வாக்குவாதம் செய்தார்.

சிபிஐ அலுவலகம் மீது கல்வீச்சு
மேலும் சிபிஐ அலுவலகம் முன்பாக திரண்ட திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிபிஐக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். அப்போது சிபிஐ அலுவலகம் மீது கல்வீசியும் சிலர் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கைது செய்ய வலியுறுத்தல்
இதனிடையே மாநில அரசு, சபாநாயகர் அனுமதி பெறாமல் அமைச்சர்களை கைது செய்தது சட்ட விரோதம்; ஆகையால் இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்ட சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநில காவல்துறை தலைவரிடம் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மே.வங்க ஆளுநர் கருத்து
இந்நிலையில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் தமது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் மமதா பானர்ஜி அரசியல் சாசன மரபுகளையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications