கடன் தள்ளுபடி செய்யுங்கய்யா.. எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் 3வது நாளாக டெல்லியில் போராட்டம்
எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 3வது நாளாக இன்றும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி: தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் 3வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவிரி மேலாண்மை, வறட்சி நிவாரணம், பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
Recommended Video

சுமார் 41 நாள்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மீண்டும் போராட்டம்
இந்நிலையில், வாக்களித்தபடி முதல்வரும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று கோரி, தமிழக விவசாயிகள் மீண்டும் தங்களது போராட்டத்தை டெல்லியில் தொடங்கியுள்ளனர். முதல் நாள் அவர்களை போலீசார் கைது செய்தாலும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

கொட்டும் மழையில் போராட்டம்
நேற்று டெல்லியில் கனமழை பெய்தது. கொட்டும் மழையிலும், அரை நிர்வாணத்துடன் தமிழக விவசாயிகள் அனைவரும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கொண்டு சென்ற துணிமணி உள்ளிட்ட உடைமைகளை வைக்கக் கூட இடம் இல்லாமல் தவித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கொண்ட லட்சியத்திற்காக போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள்.

3வது நாள் போராட்டம்
இந்தப் போராட்டம் இன்றும் 3வது நாளாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று எலும்புக் கூடுகளுடன் தமிழக விவசாயிகள் அரை நிர்வாணத்தோடு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராட்டம் தொடரும்
போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு, தமிழக அரசு, கடன் தள்ளுபடி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது. அந்த வழக்கு திரும்ப பெறப்படும் என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். மத்திய அரசும் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். இவை எல்லாம் முறைப்படி நடக்கும் வரை போராட்டம் தொடரும் என்ற கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications