பிளானுக்கு பச்சைக்கொடி காட்டினாரா சசிகலா?...'புன்னகை மன்னனாக' மாறிய டிடிவி தினகரன்!
டிடிவி தினகரன் இன்று பெங்களூருவில் பேட்டி கொடுத்த போது வாயெல்லாம் பல்லாக புன்னகை ததும்ப பேசினார்.
பெங்களூரு: அதிமுக அலுவலத்திற்கு செல்ல தன்னை யாராலும் தடுக்க முடியாது என்று அதிரடியாக சொன்ன டிடிவி தினகரன், பேட்டி முடியும் வரை புன்னகை மன்னனாகவே பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் சிறையில் உள்ள பொதுச்செயலாளர் சசிகலாவை இன்று சந்தித்த பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதிமுகவிற்காக சிறை சென்ற தான் கட்சியில் தொடர்ந்த நீடிப்பதாகக் கூறிய துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் 2 மாதம் பொருத்திருந்து பார்க்கலாம் என்று சசிகலா சொன்னதையடுத்து அமைதியானார்.
இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பிற்கு கொடுத்த அவகாசம் முடிகிறது, தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளேன் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணியினர் வயிற்றில் புளியை கரைத்தார் தினகரன்.

பெங்களூருவில் டிடிவி தினகரன்
இந்நிலையில் கெடு முடிவதையொட்டி சசிகலாவை சந்திக்க தினகரன் பெங்களூரு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பரப்பன அக்ரஹாரா சிறைக்கு பிற்பகல் 3 மணியளவில் சென்ற தினகரனுடன் அதிமுக அம்மா அணியின் கர்நாடகா வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த புகழேந்தியும் மேலும் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சிறையில் கெடுபிடி
சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்த டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டையடுத்து சிறை விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டள்ளதாக தெரிகிறது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து அதன் பின்னரே தினகரன் சசிகலாவை சந்திக்க முடிந்தது.

அலுவலகம் செல்வேன்
சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. சந்திப்பின் போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து தினகரன் விரிவாக கூறவில்லை என்றாலும் கட்சி அலுவலகத்திற்கு தான் செல்ல உள்ளதாகவும், விரைவில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதுக்கெல்லாம் பதில் தர முடியுமா?
எடப்பாடி தரப்பினர் தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியை நடத்த முயல்கிறார்கள். எடப்பாடி தலைமையில், கட்சி, ஆட்சி நடப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாக கூறியுள்ளதற்கு பதிலளித்த தினகரன் ஜெயக்குமார் சொல்வதற்கெல்லாம் பதிலளித்தால் சளித்துப் போய்விடும் என்றார்.

பச்சைக்கொடி
சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த தினகரன் ஜாலியாக பேட்டியளித்ததோடு, யாரையாவது கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, சொல்லுங்கள் என்று செய்தியாளர்களைப் பார்த்து கேட்டார். தொடர்ந்து ஜாலி மூடில் சிரித்துக்கொண்டே புன்னகைமன்னனாக தினகரன் பேட்டியளித்ததை பார்த்தால் அவரின் பிளானுக்கு சசிகலா பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவே தெரிகிறது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications