சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்.. இந்தியாவை பிளவுபடுத்தும்.. எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!
ராய்ப்பூர்: இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொழில் வல்லுநர்கள் 5வது மாநாடு நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை என்ற தரப்பில் பேசினார்.

ரகுராம் ராஜன் பேச்சு
அதில், இந்தியாவின் வளர்ச்சியை ஜனநாயகம் தடுத்து நிறுத்துவதாக சில தரப்பினர் பேசுகின்றனர். ஏன், வளர்ச்சிக்காக இந்தியாவுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் எதேச்சதிகார சிந்தனை கொண்ட தலைமை தேவை என்று நினைக்கின்றனர். ஆனால் முற்றிலும் தவறானது. இது பொருட்கள் மற்றும் மூலதனத்தை வலியுறுத்தும் தோல்வியடைந்த வளர்ச்சி மாடலை அடிப்படையாகக் கொண்டது.

சிறுபான்மை மக்கள்
இது மக்களுக்கான, புதிய சிந்தனைகளுக்கான மாடல் அல்ல. அதேபோல் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் பார்த்தால், செயல்திறன் குறைவாக இருக்கிறது. இதுவே நாம் செல்லும் பாதையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை காட்டுகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஜனநாயகத்தையும், அதன் அமைப்புகளையும் வலுப்படுத்துவதில் உள்ளது. அதுமட்டுமல்ல, சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக ஆக்குவது இந்தியாவை பிளவுபடுத்தும். அதேபோல், மக்களிடையே மனக்கசப்பை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

இலங்கை சூழல்
தொடர்ந்து இலங்கையின் பொருளாதார சூழலை குறிப்பிட்ட ரகுராம் ராஜன், நாட்டின் அரசியல்வாதிகள் சிறுபான்மையினரை தாக்குகிறார்கள் என்றால், அது வேலைவாய்ப்பை உருவாக்க முடியாமல், பிரச்சனையை திசைதிருப்பும் முயற்சிதான். அதனால் நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை. அதேபோல் சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்ட போது, இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதற்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காததே மிகமுக்கியக் காரணம்.

வேலைவாய்ப்பு
அண்மையில் 35 ஆயிரம் இடங்களுக்கான ரயில்வே துறை வேலைக்காக 12.5 லட்சம் பேர் விண்ணத்துள்ளார்கள். இதுவே இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்திற்கான சரியான சான்று. அதேபோல் கல்விக்காக செலவிடாமல், அரசின் பார்வை வேறாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள் ஏராளமானோர் இடைநின்றுள்ளனர். அவர்கள் தான் இந்தியாவின் எதிர்கால மூலதனம் என்று தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications