நிர்பயா பலாத்கார வழக்கு: தூக்கு தண்டனையை எதிர்த்து இருவர் மனு
டெல்லி: டெல்லியில் மருத்துவமாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை பெற்ற இரண்டு பேர், பாலியல் வன்கொடுமை சட்டம் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு பஸ்சில் இருந்து கிழே தள்ளிவிடப்பட்டார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனளிக்காமல் பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கெதிரான சட்டமும் உருவானது. கைது செய்யப்பட்ட 6 பேரில் ஒருவன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான். வழக்கு விசாரணை முடிவில், ஒரு சிறுவனைத் தவிர மற்ற 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தூக்குத்தண்டனை பெற்ற இரண்டு பேர், பாலியல் வன்கொடுமை சட்டம் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றதில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.