காஷ்மீர்.. தீவிரவாதிகளுடன் கடும் மோதல்.. 2 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.. சிஆர்பிஎப் வீரர் வீர மரணம்
ஸ்ரீநகர்: தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில் ஒரு துணை ராணுவப்படை வீரர் வீர மரணம் அடைந்தார். சிஆர்பிஎஃப் ஜவான் கொல்லப்பட்டனர்
Recommended Video
ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (எஸ்ஓஜி), இராணுவத்தின் 55 ராஷ்ட்ரியா ரைஃபிள்ஸ் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகியவற்றின் கூட்டுப் குழு புல்வாமா மாவட்டத்தில் உள்ள பாண்ட்ஸூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து இன்று அதிகாலை முற்றுகையிட்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இலக்கு பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த போது, அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் படை வீரரக்ளும் பதிலடி கொடுத்தனர்.
இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் காயமடைந்தார். காயமடைந்த சிஆர்பிஎஃப் வீரரை மருத்துவமனைக்கு கொன்று சென்றனனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து இரண்டு ஏ.கே. தாக்குதல் ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கர்னல் ராஜேஷ் கலியா தெரிவித்தார். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிரவாதிகள் குறித்து தேடுதல் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார் என்பதை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜூலை 2016 இல் தீவிரவாதி புர்ஹான் வானி கொல்லப்பட்ட பின்னர் தீவிராவதிகள் கோட்டையாக உருவெடுத்துள்ள தெற்கு காஷ்மீர் மாவட்டங்களான புல்வாமா, குல்கம், ஷோபியன் மற்றும் அனந்த்நாக் பகுதிகளில் இந்த மாதத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகமாகி உள்ளது. இந்த மாதத்தில் இதுவரை 12க்கு மேற்பட்ட துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் சுமார் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications