லோக்சபா தேர்தலில் படுதோல்வி... உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் ராஜினாமா
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளதற்கு பொறுப்பேற்று அம்மாநில தலைவர் ராஜ் பப்பர் ராஜினாமா செய்துள்ளார்.
நாட்டிலேயே அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் உத்தரபிரதேசம். பிரதமரை தேர்வு செய்யும் வாய்ப்பை இந்த மாநிலம் வழங்குவதால் தேசிய கட்சிகளுக்கு உத்தரபிரதேசம் மிக முக்கியமானதாக இருக்கிறது.
இந்த நிலையில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதுவும் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதி மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளது.

ஆனால், பாஜக கூட்டணியானது உத்தரபிரதேசத்தில் 64 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த படுதோல்விக்கு பொறுப்பேற்று மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் ராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பக்ஷி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராஜ் பப்பரின் ராஜினாமாவை ஏற்பது குறித்து காங்கிரஸ் தலைமை விரைவில் முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வேதனை அளிப்பதாகவும், பொறுப்பை உரிய முறையில் செய்ய தவறி விட்டதாக அவர் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.
இதனிடையே, காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாளை நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications