வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு தங்கப் புதையல்.. அள்ளிக்கொண்டு போன போலீஸ்
லக்னோ: உத்தப்பிரதேசத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு குவியல் குவியலாக தங்க நகைகள் புதையலாக கிடைத்துள்ளது. இதை அவர் மறைக்க முயன்ற நிலையில், ஊருக்குள் தகவல் கசிந்து கடைசியில் போலீஸ் நகைகளை அள்ளிக்கொண்டுபோனது. இதன் மதிப்பு ரூ.25லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் நகரில் ஒருவர் புதிதாக வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மண்ணுக்குள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். அந்த புதையலை எடுத்து பார்த்த போது, அதில் 650 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆபரணங்களை இருப்பதை அறிந்தார். ஆனால் இதை யாருக்கும் சொல்லாமல் அப்படியே மறைத்துவைத்துக்கொண்டு வழக்கமாக வேலையில் ஈடுபட்டார்

ஆனால் எப்படியே தங்கம் புதையல் கிடைத்த விஷயம் ஊரெல்லாம் பரவியது. இதை கேள்விப்பட்ட போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். முதலில் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று நிலத்தின் உரிமையாளர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால் போலீசார் விடாமல் எச்சரிக்கவே புதையல் கிடைத்தை ஒப்புக்கொண்டார். பின்னர் புதையலை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர் அவற்றின் மதிப்பு சுமார் 25 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என போலீசார் கூறினர்.
स्वाट टीम व थाना सांडी पुलिस द्वारा भारी मात्रा में सोने व चांदी के आभूषण बरामद। @Uppolice @Igrangelucknow @adgzonelucknow pic.twitter.com/wUg3cHKAEn
— hardoi police (@hardoipolice) September 5, 2019
இந்த புதையல் கைப்பற்றப்பட்டது தொடர்பாக பேசிய ஹார்டோய் காவல் கண்காணிப்பாளர் அலோக் பிரியதர்ஷி, 100 ஆண்டுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த நகைகள் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது. புதையல் கிடைத்த இடத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்கள் எதையும் வைத்திருக்கவில்லை. எனவே நாங்கள் புதையலை பறிமுதல் செய்தோம் என்றார்.
-
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications