என்னடா இது நாட்டுக்கு வந்த சோதனை.. உ.பி.யில் 'மோடியால்' நின்றுபோன திருமணம்!
இந்திய பொருளாதார மந்த நிலைக்கு யார் காரணம் என்பதில் கருத்தொற்றுமை இல்லாததால் மணமக்கள் திருமணத்தை நிறுத்தியுள்ள சம்பவம்உ.பியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : பிரதமர் மோடி குறித்து திருமணம் செய்த கொள்ள இருந்த தம்பதி கூறிய இருவேறு கருத்துகளால் உத்தரபிரதேசத்தில் ஒரு திருமணம் தடைபட்டுள்ளது.
இளைஞர்களுக்கு அரசியல் தெரியாது... அரசியல் புரியாது.. அறிவார்ந்த தர்க்கம் தெரியாது என்றெல்லாம் பொது தளத்தில் கருத்து சொல்லப்படுகிறது. ஆனால் இதை பொய்யாக்கும் வகையில் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களின் உதவியுடன் மக்கள் பிரச்னைகளுக்காக இளைஞர்கள் போராடிவருகிறார்கள்.
ஆனால், உத்தரபிரதேசத்தில் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்ட சம்பவம் இந்த விவகாரத்தில் முக்கியமாக கவனிக்க வைத்திருக்கிறது.

திருமண பேச்சின் போது விவாதம்
உத்தரபிரதேசத்தில் தொழிலதிபருக்கும் அரசு பணியாளருக்கும் குடும்பத்தாரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. திருமண ஏற்பாடுகள் குறித்து முடிவு செய்ய அவர்களது பகுதியில் அமைந்துள்ள கோவிலில் இரு குடும்பத்தினரும் கலந்து பேசவிரும்பினர். பொருளாதார மந்த நிலை குறித்த விவாதம் எழும் வரை, திருமணம் குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாகத்தான் நடந்தது.

மோடி காரணமா?
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலைக்கு பிரதமர் மோடிதான் காரணம் என்று மணமகள் காட்டமாக விமர்சனம் செய்ததும், அதை ஒப்புக்கொள்ளாத மணமகன், மோடி இதற்கு காரணமில்லை, உலக பொருளாதார மந்தமே காரணம் என்று பதில் கருத்து சொன்னார்.

கடுப்பான மாப்பிளை
விவாதம் சூட்டாகியதில் குடும்பத்தினர் பதறிபோயினர். சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இருவரும் திருமணத்தை நிறுத்தச்சொல்ல, குடும்பத்தினர் அதிர்ந்துபோயினர். வேறு வழியில்லாமல் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மோடிக்கு ஆதரவு
பிரதமரை முன்பின் பார்க்காவிட்டாலும், மோடிக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்களை இளைஞர்கள் முன்வைத்துவருகிறார்கள் என்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால், திருமணம் நின்று போகுமளவுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அவர்களது ஊர்காரர்கள். எது எப்படியோ, இளைஞர்களுக்கு அரசியல் தெரியாது அல்லது அரசியல் பேசமாட்டார்கள் என்ற கருத்தாக்கத்தை இது போன்ற சம்பவங்கள் உடைக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications