டெல்லியை நோக்கி படையெடுத்த ராணுவத்தினர்.. நடுங்கிப் போன மத்திய அரசு!
டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு டெல்லியை நோக்கி திடீரென ராணுவத்தினர் கிளம்பி வந்த சம்பவம் அப்போது மத்திய அரசை பெரும் பதட்டத்திற்குள்ளாக்கியதாக ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏகே.செளத்ரி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம், படையினரை உடனடியாக திரும்புமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து ராணுவத்தினர் மீண்டும் பாசறைக்குத் திரும்பியதாக அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் மத்திய அரசை பயமுறுத்தியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. தற்போது அதை ஆம் என்று கூறியுள்ளார் செளத்ரி.

2012ம் ஆண்டு ஜனவரி மாதம்
2012ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டெல்லியை நோக்கி திடீரென ராணுவ வீரர்கள் படை கிளம்பி வந்தது. இது அரசின் கவனத்திற்கு உடனடியாக சென்றது. அதுகுறித்து அப்போது பரபரப்பும் ஏற்பட்டது.

பயந்து போன அரசு
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற ராணுவ தளபதியான செளத்ரி கூறுகையில், இது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அரசின் உயர்மட்டம் பெரும் பதட்டமடைந்து விட்டது.

அவசர உத்தரவு
உடனடியாக பாதுகாப்புத்துறை செயலாளர் ராணுவத் தலைமையைத் தொடர்பு கொண்டு படையினரைத் திரும்பச் சொன்னார். அதன் பின்னர் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பயப்படத் தேவையில்லை
இந்த விஷயத்திற்காக அரசு அவ்வளவு தூரம் பயந்திருக்கத் தேவையில்லை என்று நான் பாதுகாப்புத்துறை செயலாளரிடம் தெரிவித்தேன் என்றார் செளத்ரி.

ஏன் இந்த படை நடமாட்டம்
அந்த சமயத்தில் அப்போதைய ராணுவத் தலைமைத் தளபதி வி.கே. சிங்கின் வயது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருந்தது. மேலும் அரசுக்கும், சிங்குக்கும் இடையே கடும் மோதலும் மூண்டிருந்தது. இந்த பின்னணியில்தான் படை வீரர்கள் நடமாட்டம் அரசுக்குப் பல சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டது.

புரட்சிக்குத் திட்டமா
ராணுவப் புரட்சி வெடிக்கலாமோ என்ற சந்தேகங்கள் கூட கிளப்பப்பட்டன. ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியும் அதை மறுத்து விட்டனர்.

ஹிஸ்ஸார், ஆக்ராவிலிருந்து
ஜனவரி 16ம் தேதி இரவு ஹிஸ்ஸார் மற்றும் ஆக்ராவிலிருந்து வழக்கத்திற்கு விரோதமான வகையில் ராணுவத்தினர் கிளம்பி டெல்லியை நோக்கி வந்தனர். இதுவே அப்போது ஏற்பட்ட பதட்டத்திற்குக் காரணம்.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications