அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கிய மோடியை எதிர்க்கும் காங் வேட்பாளர்
வாரணாசி: புனித தலமாக கருதப்படும் வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் மீது பல குற்றச்சாட்டுகள் புற்றீசல் போல் கிளம்பியுள்ளன.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் நிறுத்தியுள்ள வேட்பாளரான அஜய் ராய் மீது பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவிலிருந்து வெளியேறி 5 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸில் இணைந்தவரான அஜய் தற்போது கோலஸ்லா தொகுதி எம்எல்ஏ வாக இருக்கிறார்.
குண்டர் சட்ட வழக்கு:
இவர் மீது வாரணாசியில் உள்ள காவல்நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. குறிப்பாக குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அஜய் மீது வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மக்கள் அதிருப்தி:
இதற்கு நடுவில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் சார்பாக களமிறக்கப்பட்டுள்ள அஜய் மீது வாரணாசி மக்களும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மண்ணின் மைந்தனாம்:
அதேசமயம், வாரணாசி வந்த அஜய்க்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மண்ணின் மைந்தன் என்ற அடிப்படையில் வாரணாசியில் தம்மால் வெல்ல முடியும் என்று அஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கெஜ்ரிவால்:
காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஜய்க்கு பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி - கெஜ்ரிவாலை எதிர்த்து:
வாரணாசியில் மோடி மற்றும் அஜய் ரே தவிர ஆம்ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.