நாலாப்பக்கமும் ரத்தம், அழு குரல்கள்! ஒடிசா ரயில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்
ஒடிசா: பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் சுமார் 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியுள்ளனர்.
12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.

அதேபோல பெங்களூரிலிருந்து புறப்பட்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், பத்ராக் ரயில் நிலையத்தை கடந்து பல்சோர் வந்து சேரவில்லை. இதேபோல சரக்கு ரயில் ஒன்றும், இதுபோன்று அடுத்த ரயில் நிலையத்தை வந்து சேராமல் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகம் அதிகரித்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த கோர விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க தொடங்கியுள்ளனர். உதவிக்கு விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட கோர ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளன.
இந்நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்த பஹானாகா கிராமவாசிகள் இது குறித்து விவரித்துள்ளனர். சமல் எனும் கிரமவாசி கூறியதாவது, "நான் எனது பெட்டிக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் பலத்த சத்தம் கேட்டது. இதனையடுத்து உடனடியாக அங்கு சென்று பார்த்தேன். ஆனால் இருலில் என்னால் எதையும் சரியாக பார்கக்க முடியவில்லை. ரயில் பெட்டிகளில் விபத்தில் சிக்கியிருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.
அருகில் சென்று பார்த்தபோது பலரும் உதவி கேட்டு அழுதுக்கொண்டிருந்தனர். அதேபோல, சிலர் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கியிருந்தனர். ரத்தம் எங்கு பார்த்தாரலும் சிதறி கிடந்தது. இரவு 7 மணிக்கு இந்த விபத்து நடந்தது" என்று கூறியுள்ளார். அதேபோல ரயில் பெட்டியில் சிக்கியிருந்தவர்கள் கூறுகையில்,

"நான் முதல் பெட்டியில் இருந்தேன். ரயில் விபத்துக்கு உள்ளாவது நன்றாக தெரிந்தது. எங்களுடைய பெட்டி தண்டவாளத்தைவிட்டு இறங்கி சறுக்கிக்கொண்டே சென்றது. யாரோ எனது பெட்டியின் ஜன்னலை உடைத்திருந்தார்கள். எனவே நாங்கள் அதன் வழியாக வெளியே வர முடிந்தது அதன் பின்னர் சரக்கு ரயில் ஒன்று எங்கள் ரயில் மீது மோதியது. இது பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதை பொன்ற ஓர் அதிர்வை கொடுத்தது" என்று கூறியுள்ளார்.
இவர் உட்பட பல மக்களின் உயிர்களை உள்ளூர் வாசியான சமல் உள்ளிட்ட சிலர் காப்பாற்றியுள்ளனர். இந்த ரயில் பெட்டிகளில் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளர்கள்தான் இருந்துள்ளனர் என்று உயிர் பிழைத்த சக புலம் பெயர் தொழிலாளியான மொண்டல் கூறியுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications