நாலாப்பக்கமும் ரத்தம், அழு குரல்கள்! ஒடிசா ரயில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்

Subscribe to Oneindia Tamil

ஒடிசா: பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமார்-சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிக்கொண்டதில் சுமார் 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் இது குறித்து தெளிவாக விளக்கியுள்ளனர்.

12841 எனும் எண் கொண்ட கோராமண்டல் எக்ஸ்பிரஸ் மேற்குவங்கத்தின் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு வாரத்திற்கு 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல இந்த ரயில் பிற்பகல் 3.20 மணியளவில் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டிருக்கிறது. ஆனால், சான்ட்ராக்சி, காரக்பூர், பல்சோர் ஆகிய ரயில் நிலையங்களை கடந்துள்ளது. ஆனால், அது பத்ராக் ரயில் நிலையத்திற்கு வந்து சேரவில்லை.

Villagers who witnessed the Odisha train accident say that the accident felt like a major earthquake

அதேபோல பெங்களூரிலிருந்து புறப்பட்ட பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும், பத்ராக் ரயில் நிலையத்தை கடந்து பல்சோர் வந்து சேரவில்லை. இதேபோல சரக்கு ரயில் ஒன்றும், இதுபோன்று அடுத்த ரயில் நிலையத்தை வந்து சேராமல் இருந்துள்ளது. இதனையடுத்து சந்தேகம் அதிகரித்ததை தொடர்ந்து அதிகாரிகள் விசாரிக்க தொடங்கியுள்ளனர். அப்போதுதான் இந்த கோர விபத்து நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்க தொடங்கியுள்ளனர். உதவிக்கு விமானப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சுதந்திர இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட கோர ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதேபோன்று ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் இந்த விபத்தை நேரில் பார்த்த பஹானாகா கிராமவாசிகள் இது குறித்து விவரித்துள்ளனர். சமல் எனும் கிரமவாசி கூறியதாவது, "நான் எனது பெட்டிக்கையில் அமர்ந்திருந்தேன். அப்போதுதான் பலத்த சத்தம் கேட்டது. இதனையடுத்து உடனடியாக அங்கு சென்று பார்த்தேன். ஆனால் இருலில் என்னால் எதையும் சரியாக பார்கக்க முடியவில்லை. ரயில் பெட்டிகளில் விபத்தில் சிக்கியிருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.

அருகில் சென்று பார்த்தபோது பலரும் உதவி கேட்டு அழுதுக்கொண்டிருந்தனர். அதேபோல, சிலர் ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கியிருந்தனர். ரத்தம் எங்கு பார்த்தாரலும் சிதறி கிடந்தது. இரவு 7 மணிக்கு இந்த விபத்து நடந்தது" என்று கூறியுள்ளார். அதேபோல ரயில் பெட்டியில் சிக்கியிருந்தவர்கள் கூறுகையில்,

Villagers who witnessed the Odisha train accident say that the accident felt like a major earthquake

"நான் முதல் பெட்டியில் இருந்தேன். ரயில் விபத்துக்கு உள்ளாவது நன்றாக தெரிந்தது. எங்களுடைய பெட்டி தண்டவாளத்தைவிட்டு இறங்கி சறுக்கிக்கொண்டே சென்றது. யாரோ எனது பெட்டியின் ஜன்னலை உடைத்திருந்தார்கள். எனவே நாங்கள் அதன் வழியாக வெளியே வர முடிந்தது அதன் பின்னர் சரக்கு ரயில் ஒன்று எங்கள் ரயில் மீது மோதியது. இது பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதை பொன்ற ஓர் அதிர்வை கொடுத்தது" என்று கூறியுள்ளார்.

இவர் உட்பட பல மக்களின் உயிர்களை உள்ளூர் வாசியான சமல் உள்ளிட்ட சிலர் காப்பாற்றியுள்ளனர். இந்த ரயில் பெட்டிகளில் பெரும்பாலும் புலம் பெயர் தொழிலாளர்கள்தான் இருந்துள்ளனர் என்று உயிர் பிழைத்த சக புலம் பெயர் தொழிலாளியான மொண்டல் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+