தவறான தகவல்களை அளிக்கும் வாக்காளர்களுக்கு ஓராண்டு சிறை: தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

அடுத்தாண்டு நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக சரியான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. அதன்படி, மாநில தேர்தல் ஆணையாளர்களிடம் தவறுகளே இல்லாத நேர்மையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும்படி தலைமை தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
அதற்கான நெறிமுறைகளை நேற்று வெளியிட்டது தேர்தல் கமிஷன். அதில் வாக்காளர்கள் தங்களை பற்றிய தகவல்களை மிகச்சரியாக அதிகாரிகளிடம் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வேளை வாக்காளர்கள் தவறான தகவல்களை கொடுத்திருந்தால், அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஓராண்டு வரை சிறைத் தண்டனை பெற்று கொடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் சுமார் 76 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் 18 வயது பூர்த்தியானவர்கள் கொண்ட புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். ஆன்லைன் மூலமாகவும் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கை 80 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்களை யார் வேண்டுமானாலும் மனு கொடுத்து நீக்கி விடலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சம்பந்தப்பட்ட வாக்காளரே மனு கொடுத்தால்தான் அவர் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
சமீபத்தில் டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஏராளமானவர்களின் பெயர்கள் இப்படி நீக்கப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டப் பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் கமிஷன் நேற்று எடுத்துள்ள நடவடிக்கையால் இனி யார் பெயரையும் எளிதில் நீக்க முடியாது என நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications