மோடியின் “யார்க்கர்”.. இஸ்லாமிய நாடுகளுடன் “செம க்ளோஸ்”! ரொம்ப பெருமையா இருக்கு - குஜராத்தில் பேச்சு
காந்திநகர்: இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு நெருக்கமான உறவை வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து உள்ளார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இதில் மொத்தமாக 60.20 சதவீத மக்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள்.
2 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குஜராத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் நிறைவடைவதை அடுத்து புதிய அரசை தேர்வு செய்வதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெற்ற நிலையில் 5 ஆம் தேதி 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இறுதிக்கட்ட பிரச்சாரம்
இதனை அடுத்து 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் தொகுதிகளில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். அந்த வகையில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பலர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்றும் பிரதமர் மோடி பல பகுதிகளுக்கு சென்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு திரட்டி வருகிறார். பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு அவர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையின் குஜராத்தின் முக்கிய நகரமான அஹமதாபாத்தில் அவர் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அரபு நாடுகள்
அப்போது பேசிய அவர், கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததில் இருந்து இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவை வைத்து வருகிறது. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் உயிரிய விருதுகளை எனக்கு வழங்கி இருக்கின்றன. இந்த விருதுகளால் எனக்கு மட்டும் இன்றி மொத்த குஜராத்திகளுக்கும் பெருமை." என்று அவர் பேசினார்.

மும்முனைப்போட்டி
குஜராத்தில் இதுவரை பாஜக, காங்கிரஸ் இடையே இரு முனைப்போட்டி மட்டுமே நிலவி வந்த நிலையில் தற்போது புதிதாக ஆம் ஆத்மி கட்சியும் நெருக்கடி கொடுத்து வருகிறது. மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து இருக்கும் அக்கட்சி தேர்தல் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

மோடியின் சொந்த மாநிலம்
இது ஒருபுறம் இருக்க பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் இம்முறை அதிக இடங்களை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு பல்வேறு வியூகங்களை வகுத்து தேர்தலில் களம் கண்டுள்ளது பாஜக.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications