கருமம் கருமம்.. போர்வையை 2 மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கிறோம்.. பகீர் கிளப்பும் ரயில்வே!
ரயிலில் பயன்படுத்தப்படும் போர்வையை 2 மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கிறோம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.
டெல்லி: உலகில் இந்திய ரயில்வே துறைதான் மிகவும் பெரிய ரயில்வே துறை ஆகும். ஒவ்வொரு வருடமும் இதற்கு தனியாக பெரிய பட்ஜெட் போடப்பட்டு வந்தது.
ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி வந்த பின் ரயில்வே பட்ஜெட் தனியாக போடப்படவில்லை. மத்திய அரசு பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் இடம் பிடித்து வருகிறது.
இதனால் ரயில்வே துறை சரியாக இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கியமாக அங்குச் சுத்தம் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

அதிகமாகக் குற்றச்சாட்டு
ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் தலைகாணி, போர்வை அளிக்கப்படுவது வழக்கம். இதில் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதில்லை என்று கூறப்பட்டு வந்தது. இதற்காகப் பலர் ரயில்வே துறையின் தளத்தில் புகார்கள் அளித்து வந்தனர்.

கேள்வி
இந்த விஷயத்தில் சிஏஜி தலையிட்டது. இந்தப் புகார்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டது. மேலும் எத்தனை முறை, எப்போது தலைகாணி, போர்வை சுத்தப்படுத்தப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.

பாராளுமன்றத்தில் பதில்
இதற்கு ரயில்வே துறை பாராளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் ''ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின் தலைகாணி உறை துவைக்கப்டுகிறது. மேலும் மெத்தை விரிப்புகளும் துவைக்கப்படும். இது சரியாக செய்யப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது'' என்றுள்ளது.

2 மாதத்திற்கு ஒருமுறை
ஆனால் அங்கு இருக்கும் போர்வைகள் 2 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுகிறது என்று ரயில்வே துறை கூறியுள்ளது. தினமும் அதை மாற்றுவது இல்லை என்றும் கூறியுள்ளது. இதனால் ரயில்வே துறையில் சுத்தம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications