தமிழர்களுக்கு சித்தராமையா அளித்த உறுதி என்ன?
பெங்களூரு: உச்ச நீதிமன்றம் 12 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தர வேண்டும் என்று உத்தரவிட்டதையடுத்து பெங்களூரில் ஏற்பட்ட கலவரத்தில் இருந்து தமிழர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதியளித்துள்ளார்.
பெங்களூரு கலவரத்தையொட்டி அம்மாநில முதல்வர் சித்தராமையாவை தமிழ் சங்கத்தினரிடம் அவரது வீட்டில் சந்தித்துள்ளனர். அப்போது தமிழ் சங்கத்தினரிடம் சித்தராமையா இந்த உறுதியை அளித்துள்ளார். மேலும் காவிரி தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட தமிழ் இளைஞரை தாக்கியவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தமிழ் சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் தாமோதரனிடம், தமிழகத்தில் உள்ள கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைக்குமாறும் சித்தராமையா கேட்டுக் கொண்டுள்ளார். இதனால் தமிழக முதலமைச்சரிடம் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு ஈ- மெயில் மூலம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளதாக ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழர்கள் வாழும் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த வேணடும் என்று சித்தராமையா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதையும் தமிழ் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் 1991ம் ஆண்டில் பங்காரப்பா முதல்வராக இருந்த போது, காவிரி நீர் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் 18 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications