தினகரன் கைது.. அப்படியானால் தேர்தல் ஆணைய அதிகாரிகளையும் விசாரிப்பார்களா?
தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகளும் விசாரிக்கப்படுவார்களா என வினா எழுந்துள்ளது.
டெல்லி: இரட்டை இலையை பெற தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் சுகேஷ் பணம் மூலம் கொடுத்த வழக்கில் டிடிவி தினகரன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஒபிஎஸ் அணி, சசிகலா அணி என இரு கோஷ்டிளாகப் பிளவுபட்டது. அதனையடுத்து நடந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் சின்னமான இரட்டை இலை யாருக்கு என்ற எழுந்த போட்டியில், தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது.

அந்த இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு இடைத்தரகர் மூலம் பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடந்த 22ஆம் தேதியிலிருந்து தினகரனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவரை நேற்று இரவு 10 மணிக்கு கைது செய்துள்ளனர்.
தினகரனின் டெலிபோன் உரையாடல்கள் மத்திய உளவுத்துறையால் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. அந்த உரையாடல்களை முக்கிய ஆதாரமாகக் காட்டித்தான் தினகரனிடமிருந்து உண்மைகளை வரவழைத்துள்ளது டெல்லி குற்றப் பிரிவு போலீஸ். இறுதியில், தினகரனும் உண்மையை ஒத்துக்கொண்டதால் அவரும் அவரும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா மற்றும் தினகரன் உதவியாளர் ஜனார்த்தனன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரன் தேர்தல் ஆணைய ஆதிகாரிகளுக்கு 50 லட்சம் கொடுப்பதாக பேரம்பேசி, முதல் தவணையாக சில கோடி ரூபாய் கொடுத்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளது. அப்படியானால் இந்த வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
ஆகையால், தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுத்ததாக டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கூறுவதனால், தேர்தல் ஆணையத்திலுள்ள கருப்பு ஆடுகள் விசாரிக்கப்படுவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications