உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? தீபக் மிஸ்ராவிற்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம்
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது பற்றி, சட்ட அமைச்சகம், தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா இவ்வாண்டு, அக்டோபர் 2ம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக யார் நியமிக்கப்பட உள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சகம், தீபக் மிஸ்ராவிற்கு கடிதம் எழுதி, அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனியாரிட்டி படி, ரஞ்சன் கோகாய், மிஸ்ராவிற்கு அடுத்த இடத்தில் உள்ளார். அவர்தான் அடுத்த தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள் கூட்டாக அளித்த பத்திரிகையாளர் பேட்டியில், தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளை பற்றி விமர்சனம் செய்தனர். இதுபோல உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரஸ் மீட் செய்தது இந்திய வரலாற்றிலேயே அதுதான் முதல் முறையாகும். பிரஸ் மீட் செய்த நீதிபதிகளில் ஒருவர் ரஞ்சன் கோகாய் என்பது குறிப்பிடத்தக்கது. செல்லமேஸ்வர், மதன் லோக்கூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் பிரஸ் மீட் செய்த மற்ற மூன்று நீதிபதிகளாகும்.
சட்ட அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்னும் பதில் அனுப்பவில்லை. அவர் பதில் அனுப்பும்போது ரஞ்சன் கோகாய் பெயரைத்தான் பரிந்துரைக்க அதிக வாய்ப்புள்ளது என்று சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் முன்பாவது அடுத்த தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications