பாஜக ஆட்சியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை நாடு கடத்துவோம்: மோடி எச்சரிக்கை
கொல்கத்தா: மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் நாட்டின் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் நாடு கடத்தப்படுவர் என்று அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 16ஆம் தேதிக்குப் பிறகு நமது நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் அனைவரும் மூட்டை, முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு தங்களது நாட்டை நோக்கி வெளியேற வேண்டியிருக்கும்.
வங்க தேசத்தினரை வாக்கு வங்கியாகக் கருதி அவர்களை மமதா பானர்ஜி வெளியேற்றாமல் விட்டு விட்டார். வங்க தேசத்தினரை மம்தா பானர்ஜி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்.
ஆனால் பீகாரில் இருந்து இங்கு வரும் மக்களையும், ஒடிஸாவில் இருந்து இங்கு வருவோரையும் விரட்டியடிக்கிறீர்கள். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தாராளமாக அனுமதிக்கிறீர்கள். அவர்களை மனமுவந்து வரவேற்கிறீர்கள்.
இப்படியான வாக்கு வங்கி அரசியல் மூலம் இந்த நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை இடதுசாரி கட்சிகள் 35 ஆண்டுகள் சீரழித்தனர். ஆனால் மமதா பானர்ஜியோ 35 மாதங்களில் அவர்களை விட கூடுதலாக நாசப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
வங்கதேசத்தவருக்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள்...
அசாம் மாநிலத்தில் முன்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நரேந்திர மோடி, சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தவர்களுக்கு இடம் ஒதுக்குவதற்காக நாட்டின் அரிய வகை விலங்கினமான காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டிப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications