பாஜக ஆட்சியில் சட்ட விரோதமாக குடியேறிய வங்கதேசத்தினரை நாடு கடத்துவோம்: மோடி எச்சரிக்கை
கொல்கத்தா: மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைத்தால் நாட்டின் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் நாடு கடத்தப்படுவர் என்று அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் செராம்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 16ஆம் தேதிக்குப் பிறகு நமது நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள வங்க தேசத்தினர் அனைவரும் மூட்டை, முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு தங்களது நாட்டை நோக்கி வெளியேற வேண்டியிருக்கும்.
வங்க தேசத்தினரை வாக்கு வங்கியாகக் கருதி அவர்களை மமதா பானர்ஜி வெளியேற்றாமல் விட்டு விட்டார். வங்க தேசத்தினரை மம்தா பானர்ஜி சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறார்.
ஆனால் பீகாரில் இருந்து இங்கு வரும் மக்களையும், ஒடிஸாவில் இருந்து இங்கு வருவோரையும் விரட்டியடிக்கிறீர்கள். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் தாராளமாக அனுமதிக்கிறீர்கள். அவர்களை மனமுவந்து வரவேற்கிறீர்கள்.
இப்படியான வாக்கு வங்கி அரசியல் மூலம் இந்த நாட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தை இடதுசாரி கட்சிகள் 35 ஆண்டுகள் சீரழித்தனர். ஆனால் மமதா பானர்ஜியோ 35 மாதங்களில் அவர்களை விட கூடுதலாக நாசப்படுத்தியுள்ளார்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
வங்கதேசத்தவருக்காக கொல்லப்படும் காண்டாமிருகங்கள்...
அசாம் மாநிலத்தில் முன்பு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நரேந்திர மோடி, சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசத்தவர்களுக்கு இடம் ஒதுக்குவதற்காக நாட்டின் அரிய வகை விலங்கினமான காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டிப் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications